இந்தியாவுக்கு 4 பதக்கம்: ஸ்பெஷல் ஒலிம்பிக் பாட்மின்டனில்

கோலாலம்பூர்: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் பாட்மின்டனில் இந்தியாவுக்கு ஒரு தங்கம் உட்பட 4 பதக்கம் கிடைத்தது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதில் 10 நாடுகளை சேர்ந்த, 80 பேர் பங்கேற்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சான்வி சர்மா தங்கம் வென்றார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சான்வி சர்மா, சுஜிதா சுகுமாறன் ஜோடி வெள்ளி கைப்பற்றியது.

ஆண்கள் ஒற்றையர் பைனலில் ஏமாற்றிய இந்தியாவின் அங்கித் தலால் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கித் தலால், அமல் பிஜு ஜோடி வெள்ளி வென்றது.
ஒரு தங்கம், 3 வெள்ளி என, 4 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Advertisement