விஷம் குடித்து பெண் தற்கொலை
பெண்ணாடம்; பெண்ணாடம் அருகே குடும்ப பிரச்னையில் விஷம் குடித்து பெண் தற்கொ லை செய்து கொண்டார்.
பெண்ணாடம் அடுத்த கோனுார், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன், 36; இவரது மனைவி சந்திரா, 33; இவர், தனது இரு மகன்களை கடந்த ஓராண்டாக விருதுநகரில் உள்ள தாய் வீட்டில் தங்கி படிக்க வைத்து வந்தார்.
கடந்த மாதம் சந்திரா கோனுாருக்கு வந்தார். கடந்த 21ம்தேதி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால், மனமடைந்த சந்திரா, பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன், குடும்பத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுமியை மணந்தாலும் குற்றம்... குற்றமே...! போக்சோ வழக்கில் மும்பை ஐகோர்ட் அதிரடி
-
ஸாவென் தர்ஸ்டே சிக்ஸ் ஹரேன்த்ரா சிக்ஸ்டி = ரூ.7,616
-
பெண்கள் உலக கோப்பை: இந்திய அணி வெற்றி துவக்கம்
-
தர்மபுரி மார்க்கெட்டில் 25 டன் பூக்கள் விற்பனை
-
நிலப்பட்டா, மனை பட்டா கோரி விவசாய தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
-
பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
Advertisement
Advertisement