இரட்டை கொலையில் 3 பேரிடம் விசாரணை
கிருஷ்ணகிரி;கிருஷ்ணகிரி பாஞ்சாலியூர் அருகே, யாசின் நகரை சேர்ந்தவர் எல்லம்மாள், 50. வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். கடந்த, 26ம் தேதி வீட்டில், 13 வயதான மகள் சுசிதாவுடன் இருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து, 2 பேரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், கொலையாளி
களை பிடிக்க, 7 தனிப்படைகளை அமைத்தனர். அவர்கள், எல்லம்மாளுக்கு கடைசியாக மொபைல் போனில் பேசியவர்கள் மற்றும் டவரில் பதிவான எண்களை கொண்டு விசாரணை நடத்தினர். அதில், சந்தேகத்தின் பேரில், 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோட்டைகுள்ளமுடையான் ஏரி நிரம்பியது
-
பலியான மாணவரின் பெற்றோருக்கு பா.ஜ., ஆறுதல்
-
கள்ளக்காதலுக்கு இடையூறு செய்த கணவன் கொலை திட்டம் தீட்டிய மனைவி உள்பட 3 பேர் கைது
-
கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க., செயலர் கைது
-
கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரியை ஒப்படைத்த மக்கள்
-
வீடு கட்டி தருவதாக பணம் மோசடி செய்த வாலிபர் கைது
Advertisement
Advertisement