தென்னந்தோப்பில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா பெரு-கோபனப்பள்ளி அடுத்த கோட்டூர் கிராமத்தில், கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு, 12 அடி நீள மலைப்பாம்பு கடந்த ஒரு மாதமாக, அப்பகுதியி-லுள்ள குடியிருப்புகளில் இருந்த கோழிகளை இரையாக்கிக் கொண்டு தென்னந்தோப்பிலுள்ள புதர்களில் பதுங்கி இருந்தது.


நேற்று காலை அந்த மலைப்பாம்பு ஒரு கோழியை பிடித்து விழுங்கிக் கொண்டிருந்தது. இதை அவ்வழியே சென்ற கிருஷ்ணமூர்த்தி பார்த்து, பர்கூர் தீய-ணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்-துள்ளார். நிலைய அலுவலர் பழனி தலை-மையில் வந்த தீயணைப்புத்துறையினர், மலைப்பாம்பை பிடித்து, தொகரப்பள்ளி காப்-புக்காட்டில் விட்டனர்.

Advertisement