போச்சம்பள்ளி வாரச்சந்தை; ஆடுகள் வரத்தின்றி 'வெறிச்'
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்-சந்தைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள், விவசாயிகள் ஆடுகள், நாட்டு கோழிகளை விற்-பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
கடந்த, 17-ல் புரட்டாசி மாதம் பிறந்ததை அடுத்து, நேற்று முன்தினம் புரட்டாசி, 2வது சனிக்கிழமை முடிந்த நிலையில், அசைவ பிரியர்கள் இறைச்சி மீது ஆர்வம் காட்டவில்லை. புரட்டாசி 3-வது, 4-வது சனிக்கிழமை மற்றும் புரட்டாசி மாதம் முழுவதும், மக்களில் பலர் விரதமிருந்து, பெருமாள் சுவாமியை வணங்குகின்றனர். இதனால் நேற்று கூடிய போச்சம்பள்ளி வாரச்சந்-தைக்கு விவசாயிகள், வியாபாரிகள், 500க்கும் குறைவான ஆடுகளையே விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அவைகளை வாங்க, மக்கள் ஆர்வம் காட்டாததால் வியாபாரிகள், விவசாயிகள், 200க்கு மேற்பட்ட ஆடுகளுடன் திரும்பிச்சென்றனர்.
மேலும்
-
இனி இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கவே கூடாது; கரூர் துயரம் பற்றி நிர்மலா சீதாராமன் பேட்டி
-
கரூர் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள்: ஆராயும் காவல்துறை
-
திருமலை கருட சேவை,திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள்
-
கரூரில் நடந்த துயர சம்பவம்: விசாரிக்க தேஜ கூட்டணி சார்பில் குழு அமைப்பு
-
தமிழகம் முழுவதும் பத்திரவுப்பதிவு இணையதளம் திடீர் முடக்கம்; பொதுமக்கள் அவதி
-
தினமும் 3.5 லட்சம் புதிய பயனர்கள்; 'அரட்டை' செயலிக்கு அதிகரிக்கும் மவுசு