மாணவி, சிறுமி மாயம்



கோபி, கோபி அருகே வடக்கு வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகள் பிரியதர்ஷினி, 16; மகளிர் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி. கடந்த, 26ம் தேதி திடீரென மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. பாலசுப்பிரமணியம் புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.

* ஈரோடு அகத்தியர் வீதி கருபண்ணசுவாமி கோவில் எதிர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் குமார் மகள் வர்ஷினி, 17; பேன்சி கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். கடந்த, 24ம் தேதி மாலை வயிறு வலிப்பதாக கூறி கடையில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. கணேஷ்குமார் புகாரின்படி ஈரோடு டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement