தந்தை-மகன் கைவிலங்குடன் தப்பி ஓட்டம்
திருவனந்தபுரம்; கேரள மாநிலம் கொல்லம் அருகே திருட்டு வழக்கில் கைதான தந்தை மகன் விலங்குடன் தப்பி ஓடினர்.
திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல்லைச் சேர்ந்தவர் அயூப் கான் 56. மகன் செய்யது அலவி 18. இருவர் மீதும் திருட்டு வழக்குகள் உள்ளன.
இருவரும் சேர்ந்து திருடச் செல்வது வழக்கம். சில நாட்களுக்கு முன் திருவனந்தபுரம் அருகே பாலோடு பகுதியில் ஒரு வீட்டில் இரண்டு பேரும் திருடினர். வயநாட்டில் தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.
கொல்லம் அருகே வந்தபோது இருவரும் இயற்கை உபாதைக்காக ஜீப்பை நிறுத்தக்கோரினர். ரோட்டோரம் வாகனத்தை நிறுத்தி அனுப்பியதும் இருவரும் கைவிலங்குடன் ஓட்டம் பிடித்தனர்.
மலைப்பகுதி என்பதால் எளிதில் தப்பினர். இருவரையும் படிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு; ஒரு சவரன் ரூ.87,040க்கு விற்பனை
-
மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
-
தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!
-
சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!
Advertisement
Advertisement