'தினமலர்' நடத்தும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் நாளை நடக்கிறது
-நமது நிருபர்-
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் குழந்தைகளுக்கான 'அ, ஆ' எழுதும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சி, நாளை(2ம் தேதி) நடக்கிறது.
'தினமலர்' மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி இணைந்து, கல்வி சாலைக்குள் அடியெடுத்து வைக்க காத்திருக்கும் இளந்தளிர்கள், சரஸ்வதி தேவியின் அருள்பெற, விஜயதசமி திருநாளில், 'அரிச்சுவடி ஆரம்பம்' எனும் 'வித்யாரம்பம்' நிகழ்ச்சியை நடத்துகிறது.
கல்வியில் சாதனை படைத்து பல்வேறு துறைகளில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் முக்கிய பிரமுகர்கள் மடியில், உங்களது செல்ல குழந்தைகளை அமர வைத்து பிஞ்சு விரல்களை பிடித்து 'அரிச்சுவடியை' ஆரம்பித்து, வைக்கும் சிறந்த தருணமிது.
விழுப்புரத்தில், மாம்பழப் பட்டு ரோடு, வ.பாளையம், சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் நாளை (2ம் தேதி)காலை 9:00 முதல் 11:00 மணி வரை நடக்கிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து குழந்தை களுக்கும் விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில் 'ஸ்கூல் கிட்' சிறப்பு பரிசாக வழங்கப்படும்.
கள்ளக்குறிச்சி 'தினமலர்' மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும், குழந்தைகளுக்கான 'அ, ஆ' எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., கல்வி நிறுவனங்கள் இணைந்து, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., வித்யா சகேத் சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் நாளை (2ம் தேதி) காலை 9:00 முதல் 11:00 மணி வரை நடக்கிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஏ.கே.டி., கல்வி நிறுவனம் சார்பில் 'ஸ்கூல் கிட்' சிறப்பு பரிசாக வழங்கப்படும்.
@block_B@
இரண்டரை வயது முதல் மூன்றரை வயதுக்குட்பட்ட குழந்தைகளை, 'வித்யாரம்பம்' நிகழ்ச்சியில் பங்கேற்க செய்யலாம். இதற்கு, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 95247 81197 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும்; கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 98940 09906 என்ற வாட்ஸ் ஆப் எண்களில் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்பு கொண்டு குழந்தையின் பெயர், வயது, பெற்றோர் பெயர் மற்றும் முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பி, முன்பதிவு செய்ய வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். ஆனால் முன்பதிவு செய்த குழந்தைகள் மட்டுமே பங்கேற்க முடியும். தங்களது குழந்தைகள் எழுதும் முதல் எழுத்தின் அழகிய தருணத்தை புகைப்படம் எடுத்து, உடனடியாக புகைப்படத்துடன் கூடிய 'தினமலர்' சான்றிதழ் வழங்கப்படும்.block_B
மேலும்
-
சேலம், இடைப்பாடி, கூட்டாத்துப்பட்டி, நாமக்கல்லில் இன்று காலைக்கதிர் சார்பில் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்பம்
-
பீரோவை உடைத்து 10 பவுன் ரூ.80 ஆயிரம் திருட்டு
-
திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது
-
ரூ. 40 லட்சம் மதிப்பில் பணிகள் துவங்க பூஜை
-
தமிழகத்தில் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு புத்துயிர் கிடைக்குமா?: ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு
-
ஷீரடி சாய்பாபா புண்ணிய திதி சிறப்பு பஜனை வழிபாடு