கார்டுதாரர்களுக்கு 10ம் தேதிக்குள் ரேஷன் பொருள் வழங்க உத்தரவு

சென்னை : தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு இம்மாதத்திற்கான உணவு பொருட்களை, வரும், 10ம் தேதிக்குள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை, வரும், 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனால், ரேஷனில் பச்சரிசி, பாமாயிலுக்கு தேவை அதிகம் இருக்கும். அத்துடன் பலர், முன்கூட்டியே சொந்த ஊர் களுக்கு செல்வர்.
எனவே, இம்மாதத்திற்கான ரேஷன் பொருட்களை கார்டுதாரர்களுக்கு, வரும், 10ம் தேதிக்குள் ஒரே தவணையில் வினியோகம் செய்ய வேண்டும் என, கூட்டுறவு மற்றும் உணவு துறைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.
அதற்கு ஏற்ப, ரேஷன் கடைகளுக்கு, 100 சதவீத பொருட்களை கிடங்குகளில் இருந்து அனுப்பும் பணியில், நுகர்பொருள் வாணிப கழகம் ஈடுபட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய ஜூனியர் கிக் பாக்சிங் போட்டி 16 தங்கம் வென்று தமிழகம் அசத்தல்
-
6 ஆண்டுகளில் முதல் முறையாக முடங்கியது அமெரிக்க அரசு நிர்வாகம்: காரணம் என்ன?
-
ரூ.135 கோடியில் நவீன சிக்னல்: ரயில்வே அனுமதி
-
வணிக மனைகளுக்கு இ - ஏலம் வீட்டு வசதி வாரியம் அறிவிப்பு
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எதிரொலி: விஜயின் மக்கள் சந்திப்பு ஒத்திவைப்பு
-
ஆக்கிரமிப்பாளர்களுக்கு வீடு கட்ட கிண்டியில் 8 ஏக்கர் இடம் தேர்வு
Advertisement
Advertisement