மின்சாரம் தாக்கி வாலிபர் பலி இரண்டு பேர் காயம்

காரியாபட்டி,:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த தங்கமணி 19, கனகவேல் 19, அச்சம்பட்டி கருப்பையா 26, இவர்கள் பாலா என்பவரது கடையில் வெல்டராக வேலை செய்தனர். நேற்று காலை அச்சம்பட்டியில் ஒரு வீட்டு மாடியில் தகர செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கீழிருந்து மாடிக்கு இரும்பு பைப்புகளை மேலே ஏற்றினர். வீடு அருகே உள்ள உயர் அழுத்த மின்சார கம்பியில் இரும்பு பைப்புகள் பட்டதில் மின்சாரம் தாக்கி 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதில் தங்கமணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மற்ற இருவரும், பலத்த காயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காசாவில் அமைதி முயற்சிகளில் முன்னேற்றம்: டிரம்பின் பணிக்கு மோடி வரவேற்பு
-
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
-
பாலுார் பெருமாள் கோவில் தேரோட்டம்
-
நாளை மாலைக்குள் முடிவெடுங்க இல்லையேல் நரகத்தை பார்ப்பீங்க ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
ரயில் வருவதை அறியாமல் 'ரீல்ஸ்' எடுத்த நால்வர் பலி
-
'ஏர் இந்தியா' விமான விபத்து அறிக்கை அவசரத்தில் தயாரிக்கப்பட்டது; இந்திய விமானிகள் சங்கம் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement