25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து தப்பிய 3 முதியவர்கள்

குன்னுார்:பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில், மூன்று முதியவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்தவர்கள், ராஜன் திருமலை, 70, அலுவியா திருமலை, 68, சாமுவேல் திருமலை, 68. ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள், நேற்று கோவைக்கு காரில் சென்று ஊட்டி நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.
இரவு, 7:00 மணிக்கு குன்னுார் லாஸ் நீர்வீழ்ச்சி அருகே வந்தபோது, 25 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. குன்னுார் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டனர். சிறு காயங்களுடன் மூவரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோல்ட்ரிப் சிரப் பயன்பாடு அமைச்சர் மறுப்பு
-
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அமைச்சர் சிறப்பு அதிகாரி கைது
-
ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் எஸ்.ஐ.டி., விசாரணை
-
தசராவால் குப்பை அதிகரிப்பு சுற்றுப்புற சூழல் கடும் பாதிப்பு
-
ஆந்திர அமைச்சருக்கு பிரியங்க் கார்கே பதிலடி
-
அண்ணன் மகனின் நிலம் 'ஸ்வாகா': நகர ஆயுதப்படை டி.எஸ்.பி., சிக்கினார்
Advertisement
Advertisement