தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 3,063 ல் இருந்து 3,170 ஆக அதிகரித்துளளது.


இது தொடர்பாக தமிழக அரசின் வனம்,சுற்றுச்சூழல் துறை கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணியில், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 3,261 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ள 26 வனப்பிரிவுகளில் அறிவியல் ரீதியாக 2,043 ஊழியர்கள் ஈடுபட்டனர்.


அதில் முக்கிய அம்சங்கள்

* தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 3,063 ல் இருந்து 3,170 ஆக அதிகரித்துள்ளது.


*நீலகிரி மலைத்தொடர்களில் 76 % யானைகள் உள்ளன. அதற்கு அடுத்து அனைமலை மற்றும் கோவையில் உள்ளன.


* மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 1,777, கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 1,345 யானைகள் உள்ளன.

இந்த பணியில் ஈடுபட்ட வன ஊழியர்கள், நிபுணர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டுகள். இவ்வாறு அந்த அறிக்கையில் சுப்ரியா சாகு கூறியுள்ளார்.

Advertisement