சரவெடி தீபாவளி; இந்தாண்டு ரூ.7,000 கோடி பட்டாசுகள் விற்பனை

சென்னை: இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.7,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக பட்டாசுகள் வணிக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில் புத்தாடை அணிந்து, விதவிதமான பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது அனைவரின் வழக்கம்.
இந்தாண்டு தீபாவளி பண்டிகையை சிவகாசி, விருதுநகர், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளியூர் மக்கள் படையெடுத்து சென்று பட்டாசுகளை வாங்கிச் சென்றனர். அதுமட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிந்தன.
ஆண்டுதோறும் புதுப்புது ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பீட்சா, வாட்டர்மெலன் உள்ளிட்ட பல்வேறு வகை பட்டாசுகளும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி சிவகாசியில் சுமார் ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையான நிலையில், இந்தாண்டு கூடுதலாக ரூ.1,000 கோடி விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக டில்லியில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு பட்டாசு வெடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாகவும் பட்டாசு விற்பனை அதிகரித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.








மேலும்
-
தீபாவளியை எப்படி கொண்டாடினீர்கள்: கேட்கிறார் ராகுல்
-
நடுவானில் விமானத்தின் முகப்பு கண்ணாடியில் விரிசல்: விமானி காயம்
-
தீபாவளி வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்கள்
-
பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்; தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான்!
-
கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை: தூதர் பேட்டி
-
தீபாவளி முடிந்து சொந்த ஊர் திரும்புவோர் கவனத்திற்கு... தென் மாவட்ட மக்களுக்கு ரயில்வே அறிவிப்பு