திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப போவது உறுதி: விஜய்
சென்னை: தமிழக மக்கள் மனங்களில் முளைத்து வளர்ந்து செழித்து நிற்கும் அரசு மீதான எதிர்ப்பு இன்னும் வலுவாகி, மக்கள் விரோத திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப போவது உறுதி என தவெக தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
வெற்று விளம்பரம்
மாறாக, ஏழை விவசாயிகள் தங்களின் கடின உழைப்பின் வாயிலாக விளைவித்தவற்றை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் அவற்றை மழையில் நனையவிட்டு வீணாக்கி, ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஒரு அரசை என்னவென்று சொல்வது? வெற்று விளம்பரத்திற்காக நானும் டெல்டாக்காரன்தான் எனப் பெருமைபேசிவரும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசிற்கு ஏழை விவசாயிகள் சார்பாக நாம் முன் வைக்கும் ஒரு சில கேள்விகள். டெல்டா விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை உரிய நேரத்தில், உரிய விலைகொடுத்துக் கொள்முதல் செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் காரணம் என்ன?
பதில் என்ன?
பருவமழையினால் விவசாயப் பயிர்கள் மற்றும் விளைநிலங்கள் சேதமடையாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? விளைவிக்கப்பட்ட நெல் உள்ளிட்ட தானியங்கள் மழையில் நனைந்து வீணாகாமல், நல்லமுறையில் பாதுகாப்பாக சேமித்து வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? ஒவ்வோர் ஆண்டும் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகின்றனவே, அதைப் பார்த்தாவது, அடுத்த ஆண்டாவது நெல்மணிகள் மழையில் நனையாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எண்ணம் வரவில்லையா?
@quote@கடந்த சில நாட்களாக பெய்த மழையால், நெல்மணிகள் நனைந்து வீணாகியதற்கும், அதை விளைவித்த விவசாயிகளின் வேதனைகளுக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?quote
விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகள் இந்த வெற்று விளம்பர திமுக அரசின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகி, மூட்டையிலேயே முளைத்துள்ளன. தமிழக மக்கள் மனங்களில் முளைத்து வளர்ந்து செழித்து நிற்கும் அரசு மீதான எதிர்ப்பு இன்னும் வலுவாகி, மக்கள் விரோத திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி. வடகிழக்கு பருவமழைக் காலம் இன்னும் நீடிக்க உள்ளது.
நடவடிக்கை
ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்தி, இனி வரும் மழையினால் நெல் உள்ளிட்ட பயிர்கள் வீணாகாமல் தடுக்க வேண்டும். பருவமழையின் தாக்கத்திலிருந்து மக்களைக் காக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளம்பர செயல்பாடுகளாக இன்றி போர்க்கால அடிப்படையில் உண்மையாகவே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.
ஃபர்ஸ்ட் நீ வீட்டுக்கு வெளிய வா அப்புறம் பேசலாம்.
இதற்கு திமுக பதில் சொல்லுமோ இல்லையோ, முந்திரிக் கொட்டை சீமான் பதில் சொல்வார்.
பாஜக கூட கூட்டனி சேந்தா பயந்தாங்கோலின்னு சொல்லிடுவானுங்க,
தவெக இப்போது தமிழக வயித்தெரிச்சல் கட்சி என மாற்றப்பட்டுள்ளது ஜோசப் விஜய் விஜய் ஜீயாக மாறிய போதே என்று தொண்டர்கள் பேசுகின்றனர்.
நீங்கள் இப்படியெல்லாம் விவசாயிகளின் நலன்களுக்காக திரைப் படங்களில் வீர வசனங்கள் பேசியதாக எனக்கு இன்னும் ஞாபகத்திற்க்கு வரவில்லையே . எப்போதாவது பேசியதுண்டா? ஒருவேளை பேசியிருந்தால் இப்போது நீங்கள் கேட்பதில் நியாயமுண்டு
நெல்மணிகளைப் தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா? :: யார் சொல்லுகிறார் பாருங்கள் 8 மணி நேரம் சோறு தண்ணீர் கொடுக்காம கழிப்பறை வசதி செய்து கொடுக்காம இருந்து 41 பேர் உயிர் இழக்க காரணமான ஜோசப் சொல்லுகிறார்
விஜய் மேட்டர் முடிந்தது என்று ஒரு நண்பர் கருத்து பதிவு பண்ணி இருந்தார். விஜய் சேப்டர் இத்தோடு முடிந்தது என்று எண்ணி இருந்தார். இது திமுகவுக்கான தேர்தல் ஸ்டாலினுக்கான தேர்தல் விஜய்க்கான தேர்தல் அல்ல என்று வேறு கூறி இருந்தார் விஜய் சேப்டர் தொடர்ந்ததால் மிகவும் அப்செட் ஆகி விட்டார். சீமான் எல்லாம் நல்லவராக தெரிகிறார்.எப்படி வரும் சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கு ஆனது அல்ல என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
அவர்கள் வீட்டுக்கு போவதற்கு முன் உங்கள் பனையூர் வரவேண்டும் ஆறுதல்
சொல்வதற்கு....
வெறும் வாய்ப்பேச்சு போதாது, ஒத்த கருத்துடைய கட்சிகள் இருக்கும் அணியில் சேர்ந்து இப்பொழுதிலிருந்தே கூட்டு பிரச்சாரம் செய்யவேண்டும், அதுவும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய கட்சியின் அவலங்களை மக்களுக்கு எடுத்து சொல்லி, மக்கள் தான் தாங்கள் எவ்வளவு முட்டாள்களாக, ஏமாளிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை வலியுறுத்தி மக்கள் மனதில் ஆணி அடிக்கிற மாதிரி கருத்துக்களை சொல்லவேண்டும்.
படத்தில்தான் பிரச்சனைனா மோட்டோபைக்கில் பார்ப்பார். நிஜத்தில் ஓடிஒளிவார்,
காப்பி பேஸ்ட் அரசியல் கேவலம் பத்தோடு பதினொன்றுமேலும்
-
காலில் விழுந்து விஜய் மன்னிப்பா?
-
தேசிய பொறியாளர் தின விழா
-
37 மாவட்ட செயற்குழு; அன்புமணிக்கு எதிராக அதிரடி காட்டும் ராமதாஸ்
-
சுகாதார உதவியாளர்களை இடமாற்றம் செய்ய கோரி மனு
-
கொச்சி - தனுஷ்கோடி சாலையில் தொடரும் மண்சரிவால் அபாயம்
-
குமரியை தமிழகத்தோடு இணைக்க பாடுபட்டவர் டி.வி.ஆர்.,: தமிழ் முழக்க பேரவையில் பாராட்டு