காலில் விழுந்து விஜய் மன்னிப்பா?
கரூர்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல் நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் த.வெ.க., தலைவர் விஜய் நேற்று முன்தினம் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
விஜய் கூட்டத்துக்கு சென்ற மனைவி ஹேமலதா, மகள்கள் சாய் லக்சனா, சாய் ஜீவா ஆகியோரை இழந்த, கரூர் தான்தோன்றிமலை சிவசக்தி நகரைச் சேர்ந்த ஆனந்த ஜோதி, 38, கூறியதாவது:
நடிகர் விஜய் என்னை சந்தித்தபோது, 'உங்களை கரூரில் சந்தித்து இருக்க வேண்டும். ஆனால், போலீஸ் பாதுகாப்பு மற்றும் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரத்துக்கு உங்களை வரவழைத்ததற்காக மன்னிப்பு கோருகிறேன்' என்றார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேசும்போது, விஜய் பல தடவை கண்ணீர் சிந்தினார்.
பலமுறை ஸாரி சொன்னார். கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கு உதவுவதாக கூறினார். குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் செய்ய ஏற்பாடு செய்ததாகவும் உறுதி அளித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனந்த ஜோதியின் தாய் கிருஷ்ணவேணி, 59, கூறியதாவது:
விஜய் தனி அறையில் இருந்தார். என் கையை பிடித்துக்கொண்டு விஜய் அழுதார்; பின், என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ஆனாலும், விஜய் மீது எங்களுக்கு வருத்தம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கரூர் தான்தோன்றிமலை ஏமூர்புதுாரைச் சேர்ந்த சக்திவேல், 43, என்பவரின் மனைவி பிரியதர்ஷினி, மகள் தரணிகா ஆகிய இருவரும், த.வெ.க., கூட்டத்தில் உயிரிழந்தனர்.
மனைவி, மகளை இழந்த சக்திவேல், மாமல்ல புரத்தில் விஜயை சந்தித்தது குறித்து கூறியதாவது:
குடும்பத்தினருக்கு என்னென்ன உதவிகள் தேவை என கேட்டு குறித்து கொண்டார். விரைவில், கரூருக்கு வருவதாக சொன்னார். சினிமாவில் பார்த்த கம்பீர விஜயை, மாமல்லபுரத்தில் பார்க்க முடியவில்லை. மிகுந்த மன அழுத்தத்தில் அவர் இருந்ததை உணர்ந்து கொண்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திரையில் வில்லனை வீழ்த்த 40,000 பேரை தனி ஒருவனாக வீழ்த்தும் கதாநாயக நடிகரால் தன்னை பார்ப்பதற்கு வந்த கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் சமயத்தில் அந்த இடத்தில் நின்று மக்களுக்கு உதவி செய்ய முடியாமல் அந்த இடத்தை விட்டு ஓடி ஒளிய வேண்டிய அவலத்தை மக்களாகிய நாமும் புரிந்து கொள்ள வேண்டும்
காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் என்பதெல்லாம் சரி எத்தனை உயிர்கள் பலி ஆனது என்பதை மனதில் நிறுத்தி கொள்ள வேண்டும். அல்லு அர்ஜுன், விராட் கோலி போன்ற பிரபலங்களை பார்க்கவென்று மக்கள் கூடும் போதெல்லாம் ஏதாவது அசம்பாவிதம் அல்லது உயிர்பலி என்பது சகஜமாகிவிட்டது.இது போன்ற சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் மக்கள் முன்பு தான்தோன்றி தனமாக வருவது எந்த வகையிலும் நியாயமேயில்லை திரையில் வில்லனை வீழ்த்த 40,000 பேரை தனி ஒருவனாக வீழ்த்தும் கதாநாயக நடிகரால் தன்னை பார்ப்பதற்கு வந்த கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் சமயத்தில் அந்த இடத்தில் நின்று மக்களுக்கு உதவி செய்ய முடியாமல் அந்த இடத்தை விட்டு ஓடி ஒளிய வேண்டிய அவலத்தை மக்களாகிய நாமும் புரிந்து கொள்ள வேண்டும்.திரையில் தோன்றும் காட்சிகள் எல்லாம் உண்மையல்ல கதாநாயகர்களும் வீராதி வீரரும் சூரரும் அல்ல.அவர்களும் நம்மை போன்ற ஒருவர் தான் என்ற உண்மையை புரிந்து கொண்டு அவசியம் ஏற்பட்டால் ஒழிய கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்ல மாட்டேன் என்று உறுதி ஏற்போம். தலைவர்களும் மக்களுக்கு தங்கள் கருத்துக்களை தொலைகாட்சி வழியாகவோ அல்லது வேறு ஏதாவது வகையில் தெரிவித்தால் நலம் என்றே தோன்றுகிறது. மாற்றி யோசிப்போம்.உயிர் பலியை தடுப்போம்.
ஆரிய கூத்தாடினாலும் தாண்டவ கோனே காசு காரியத்துல கண் வய்யடா தாண்டவ கோனே, அதே தான் விஜய் 2026 கண்டிப்பா உனக்கானது இல்லை விஜய் தீயமுக்கவுக்கும் இல்ல
விஜய் எதை செய்தாலும் குறை கூறுவதற்கென்றே திமுகவால் சிலர் கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். தொலைக் காட்சி விவாதங்களில் இதை காணக் கூடியதாக இருக்கிறது. பத்திரியாளர்கள் என்ற போர்வையில் ஒருவரை தரக்குறைவான வார்த்தைகளால் தாக்கிப் பேசுவது அல்லது விமர்சிப்பது பத்திரிகைத் தர்மத்திற்கு எதிரானது என்பதை அவர்கள் பெறும் கூலி ஏற்க மறுக்கின்றது. யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால் அதில் கண்ணியம் இருக்க வேண்டும். தாங்கள் சார்ந்த கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு விஜய் ஒரு தடைக் கல்லாக இருப்பார் என்பதற்காக தரம் இழந்து விமர்சனம் செய்வது மனிதர்க்கு அதிலும் தமிழர்களுக்கு அழகல்ல.
ஆட்சிக்கு வரும் வரை அரசியல்வாதிகள் வாக்காளர்களின் காலில் விழுவர். ஆட்சிக்கு வந்ததும் வாக்காளர்களை மறந்துவிட்டு சொத்துக்கள் குவிப்பதில் குறியாக இருப்பர்.மேலும்
-
வாரிசுகளுக்காக அதிகாரத்தை கைப்பற்றத் துடிக்கும் காங்., ஆர்ஜேடி; அமித் ஷா விளாசல்
-
ஓட்டுக்காக எதையும் செய்வார் மோடி: சொல்கிறார் ராகுல்
-
குமாரபாளையம் கல்லூரியில் 128 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்
-
தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
இந்தியா-ஜப்பான் உறவு அவசியம்: பிரதமர் மோடி உறுதி
-
அமெரிக்க வரி உயர்வு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்: துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை