மினி வேன் மீது பைக் மோதி தொழிலாளி பலி
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே நின்ற டாடா ஏஸ் வேன் மீது பைக் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி இறந்தார்.
உளுந்துார்பேட்டை அடுத்த அலங்கிரி கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் கிருஷ்ணன், 35; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் எலவனாசூர்கோட்டையில் இருந்து அலங்கரிக்கு சென்றார். இரவு 11 மணிக்கு, எலவனாசூர்கோட்டை அடுத்த பரமேஸ்வரிமங்கலம் அருகே டயர் பஞ்சராகி சாலையோரம் நின்றியிருந்த டாடா ஏஸ் மினி வேன் மீது பைக் மோதியது. இதில், பைக் ஓட்டி சென்ற கிருஷ்ணன் சம்பவ இடத்திலே இறந்தார்.
தகவல் அறிந்த போலீசார் கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து மினி வேன் டிரைவர் கள்ளக்குறிச்சி இந்திரா நகர் சேர்ந்த குமார், 54; என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
ஒடிசா எஸ்ஐ தேர்வு மோசடி: 114 பேருக்கு ஜாமின்
-
காங்கிரஸ் கூட்டத்தில் ஒலித்த வங்கதேச தேசியகீதம்; கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
-
பைனலில் தென் ஆப்ரிக்கா: பெண்கள் உலக கோப்பையில்
-
ஆஸி., சவாலை சமாளிக்குமா இந்தியா * 'உலக' அரையிறுதியில் எதிர்பார்ப்பு
-
புரோ கபடி: பைனலில் புனே
-
ராஷ்மிகா, சஹாஜா வெற்றி: சென்னை ஓபன் முதல் சுற்றில்