யார் என்ன சதி செய்தாலும் 2026ல் திமுக ஆட்சி நிச்சயம் அமையும்: முதல்வர் ஸ்டாலின்
தர்மபுரி: யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதூறுகளை நம் மீது பரப்பினாலும், 2026ல் திமுக ஆட்சி நிச்சயம் அமையும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
தர்மபுரியில் திமுக எம்பி மணி இல்லத் திருமண விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நேற்றைய தினம் மிக முக்கியமான, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை, சென்னையில் நடத்தி முடித்துவிட்டு இங்கு வந்திருக்கிறோம். முக்கியமான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். அது என்ன என்று உங்களுக்கு தெரியும். அடுத்தாண்டு நாம் எதிர் கொள்ள இருக்கும் தேர்தலை அடிப்படையாக வைத்து, சீராய்வு என்ற பெயரில் ஒரு தீய செயலை, சதி செயலை செய்ய தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருக்கிறது. அதனை தடுப்பதற்காக, அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து பேசி, தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம்.
தந்திரம்
அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என பேசினர். அதற்கு உரிய அவகாசம் கொடுக்க வேண்டும். பதற்றம் இல்லாத சூழலில் தான் அதனை செய்ய வேண்டும். தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் சூழலில், வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது உண்மையான வாக்காளர்களை நீக்க தந்திரம்.
இதனை தான் பீஹார் மாநிலத்தில் செய்தார்கள். இப்பொழுது மற்ற மாநிலங்களில் செய்ய முயற்சி செய்கின்றனர். நாம் நடத்திய கூட்டத்தில் கூட இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கும், அதிமுக பங்கேற்கவில்லை. இரு கட்சிகள் பங்கேற்கவில்லை; தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அதற்காக நான் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன்.
இரட்டை வேடம்
எதிர்க்கட்சி தலைவராக இருக்க கூடிய, பழனிசாமி இதில் கூட இரட்டை வேடத்தை காட்டி இருக்கிறார். பாஜவுக்கு பயந்து தேர்தல் கமிஷனின் நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார். அதேநேரத்தில் அவர் அதிமுக தொண்டர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
தேர்தல் கமிஷனின் நடவடிக்கையில் பழனிசாமிக்கு சந்தேகம் இருப்பதை காட்டுகிறது. ஆனால் அவரால் வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை. தான் பாஜவின் பாதம் தாங்கி என்பதை நொடிக்கு ஒருமுறை அவர் நிரூபிக்கிறார். நான் உறுதியாக சொல்கிறேன், பாஜ எப்படிப்பட்ட சதி செயலை செய்தாலும் தமிழகத்தில் எதையும் செய்ய முடியாது.
திமுக 2.0 ஆட்சி
யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதூறுகளை நம் மீது பரப்பினாலும், திமுக தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி, 2026ல் மீண்டும் நிச்சயம் அமையும். அன்றைக்கு எல்லா டிவி சேனல்களிலும் திமுக 2.0 ஆட்சி அமைந்தது என்ற செய்தி தான் வரப்போகிறது. அதனை நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள். தமிழக மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இதனை பெருமையுடன் சொல்ல விரும்புகிறேன்.
7வது முறையாக திமுக ஆட்சி அமைய நீங்கள் எல்லோரும் உறுதுணையாக இருக்க வேண்டும். 2021ல் தமிழகத்தை அதிமுகவிடம் இருந்து மீட்டு இருக்கிறோம். 2026 தேர்தல் பாஜ.,- அதிமுகவிடம் இருந்து பாதுகாக்க கூடியதாக அமைய போகிறது. மணமக்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். தமிழ் உணர்வை தமிழகத்தில் உருவாக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அப்படி சொல்லாதீங்க, யாரு எவளோ சிரம பட்டாலும், விவசாயம் அடியோடு அழிஞ்சாலும், கொலை கொள்ளை கற்பழிப்பு எவ்வளவு நடந்தாலும் குடிகார தமிழன் குவார்ட்டர்க்கும், பிரியாணிக்கும் ஆச பட்டு தி.மு.கழகத்துக்கு தான் ஓட்டு போடுவாங்கனு சொல்லுங்க
தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் கூட தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள நினைப்பதில்லை. இன்னமும் சதி என சொல்லி மக்களை முட்டாளாக்க முயற்சிப்பது!
Stalin government has lowered the people standard of living. No safety for women in his ruling
எப்பேர்ப்பட்ட ஆறுதல்.
எப்படி என்னென்ன குளறுபடிகள் செய்தால் வெற்றி பெற்றமாதிரி காண்பிக்கமுடியும் என்கிற சதியும, அப்படி ஒருவேளை அத்தைக்கு மீசை முளைத்தாற்போல் என்கிறமாதிரி வெற்றி கண்டால் புது புதிதான ஆட்டை போடக்கூடிய திட்டங்கள் தீட்டவும் ஆரம்பமாகிவிட்டதோ?
மக்கள் என்ன காரணத்தால் 2021இல் அதிமுக ஆட்சியை கவிழ்த்தார்களோ, அந்த காரணிகள் சரிசெய்யபட்டுவிட்டதா?
யார் என்ன சதி செய்தாலும் 2026ல் திமுக ஆட்சி நிச்சயம் அமையும்: முதல்வர் ஸ்டாலின். நாங்கள் அந்த அளவுக்கு 1.5 கோடி மக்களை டாஸ்மாக் சரக்கு கொண்டு அவர்கள் மூளையை சலவை செய்து வைத்திருக்கின்றோம் என்று கூறுகின்றார் ஸ்டாலின் என்று படியுங்கள் அர்த்தம் சரியாக விளங்கும்
ENNATHA KUDICHU THOLACHAAR ENA THERIYALLA.DHINAM URUTTU URUTTU THARPERUMAI PHOTO SHOOT. MIGA KEVALAM.
.... கோவை நிகழ்ச்சிகளும் தொடரும்..மேலும்
-
திருமணத்தில் விருந்தினர்கள் மோதல்:உ.பி.யில் 15 பேர் படுகாயம்
-
அ.தி.மு.க.,விலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் புகார்
-
பாலஸ்தீனர்கள் 45 பேரின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல்!
-
பீஹார் மக்கள் புத்திசாலிகள், ரூ.10 லட்சம் தந்தாலும் யோசித்தே ஓட்டு போடுவார்கள்; கார்கே பிரசாரம்
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஜனநாயகத்துக்கு எதிரானது: சுப்ரீம் கோர்ட்டில் திமுக மனு
-
நேபாளத்தில் என்ன நடந்தது என்று பாருங்கள்; வழக்கு விசாரணையின் போது மேற்கோள் காட்டிய சுப்ரீம் கோர்ட்