வடகிழக்கு மாநிலங்களில் ஒரே கட்சியாக மாறும் அரசியல் கட்சிகள்
வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய திருப்பமாக, பிராந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே அமைப்பாக ஒன்று சேர்ந்துள்ளன. வடகிழக்கு மாநில மக்களின் குரலுக்காகவும், பிரதிநிதித்துவத்திற்காகவும் இம்முடிவை எடுத்துள்ளன.
வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகியவை ஏழு சகோதரி மாநிலங்களாக அழைக்கப்படுகின்றன. சிக்கிம் மாநிலம் மட்டும் சகோதர மாநிலமாக குறிக்கப்படுகிறது.
வடகிழக்கு மாநில மக்களின் பிரச்னைகளை ஒரே குரலாய் எழுப்பும் வகையில், பிராந்திய கட்சிகள் அனைத்தும் ஒன்றாக கைகோர்த்து, புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளன.
இதற்காக தேசிய மக்கள் கட்சி தலைவரும், மேகாலயா முதல்வருமான கான்ராட் சங்மா, திரிபுராவைச் சேர்ந்த டிப்ரா மோத்தா கட்சி தலைவர் பிரத்யோத் மானிக்யா, அசாமின் மக்கள் கட்சித் தலைவர் டேனியல் லாங்தசா மற்றும் நாகாலாந்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஹான்லுமோ கிகோன் ஆகியோர் ஒன்றிணைந்துள்ளனர்.
டில்லியில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட கான்ராட் சங்மா, “ஒருங்கிணைந்த அரசியல் கட்சிக்கான செயல் திட்டம், வடிவம், கொள்கை ஆகியவை அடுத்த 45 நாட்களுக்குள் முடிவு செய்யப்படும். இதற்காக தனி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது,” என தெரிவித்தார்.
அதேசமயம் முக்கிய பிராந்திய கட்சிகளான மிசோரமின் ஆளும் சோரம் மக்கள் இயக்கம், நாகாலாந்தின் தேசியவாத ஜனநாயக முன்னணி மற்றும் அசாமின் அசோம் கன பரிஷத் ஆகிய கட்சிகள் இந்த ஒருங்கிணைப்புக்கு சம்மதிக்கவில்லை. இந்த கட்சிகள் அனைத்தும் பா.ஜ.,வின் கூட்டணியில் உள்ளன.
-- நமது சிறப்பு நிருபர் -
சீனா கொடுக்கும் பணத்திற்கு இவர்கள் ஒன்று சேர்கிறார்கள். பிறகு ஸென்-ஜி போராட்டம் என்று ஆரம்பிப்பார்கள். சீனா பாரதத்திற்கு குடைச்சல் கொடுக்க இந்த ஒருங்கிணைந்த கட்சியை பயன்படுத்தும்.
வடகிழக்கு மாநிலங்கள் ஒரே மகாணமாகும் போது, பாதுகாப்பு, திருமண உறவு முறை, செல்வ வளம் அதிகரிக்கும். மத மாற்றம் குறையும். மிரட்டி வசூல் செய்யும் சிறு குழுக்கள் எதிர்க்கும். இது போன்ற முயற்சி தென் மாநில மக்களுக்கு கட்டாயம் வேண்டும். ஒரே ஜாதி, சமூக மக்கள் தொழில் புரிய கேரளா, தமிழகம், ஆந்திர பகுதியில் குடியேறினர். மொழி வாரி மாநிலம் உறவை பிரித்து விட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் சிறுபான்மை சாதி ஆக்க பட்டு கலப்பு திருமணம், மத மாற்றம் செய்ய பயன்படுத்த பட்டு வருகிறார்கள். சமூக பிணைப்பு அதிகரிக்க தென் மாகாண சபை அமைப்பு அவசியம்.மேலும்
-
வேட்பாளர் வாய்ப்புக்கு 'பென் டீமிடம்' 'இன்புளுயன்ஸ்' செய்யும் தி.மு.க.,வினர்; 'போட்டுக்கொடுக்கும்' அரசியலும் ஜரூர்
-
ட்ரையம்ப் 'ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்.எக்ஸ்.,' 3.2 வினாடியில், 100 கி.மீ., வேகம்
-
'மினி கன்ட்ரிமேன் ஜே.சி.டபுள்யூ., ஆல்4' பெட்ரோல் மாடலில் முதல் முறையாக அறிமுகம்
-
டாடாவின் 'ஏசி' சொகுசு பஸ்
-
கவாசாகி ஆப்ரோடு பைக்கிற்கு 7 ஆண்டு 'வாரன்டி' நீ்ட்டிப்பு வசதி
-
இம்மாத அறிமுகங்கள்