ராமநாதபுரத்தில் டெங்கு இருவர் அனுமதி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் சமீப காலமாக காய்ச்சல் பரவி வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் குடிநீருடன் கழிவுநீரும் கலப்பதால் மக்களுக்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டெங்கு பாதிக்கப்பட்டு ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: இருவர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறார். பரமக்குடியை சேர்ந்த ஒருவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் வசிக்கும் பகுதியில் தினமும் சுகாதார பணியாளர்கள் ஆய்வு செய்து நோய் பரவல் குறித்து கண்காணிக்கின்றனர். மேலும், மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார் வம்சாவளி இந்தியர் ஜோஹ்ரான் மம்தானி
-
நாசாவை வழிநடத்த எலான் மஸ்க் நண்பர் நியமனம்; அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
வேட்பாளர் வாய்ப்புக்கு 'பென் டீமிடம்' 'இன்புளுயன்ஸ்' செய்யும் தி.மு.க.,வினர்; 'போட்டுக்கொடுக்கும்' அரசியலும் ஜரூர்
-
ட்ரையம்ப் 'ஸ்பீடு ட்ரிபிள் 1200 ஆர்.எக்ஸ்.,' 3.2 வினாடியில், 100 கி.மீ., வேகம்
-
'மினி கன்ட்ரிமேன் ஜே.சி.டபுள்யூ., ஆல்4' பெட்ரோல் மாடலில் முதல் முறையாக அறிமுகம்
-
டாடாவின் 'ஏசி' சொகுசு பஸ்
Advertisement
Advertisement