நேபாளம் 2 இடங்களில் திடீர் பனிச்சரிவு 7 மலையேற்ற வீரர்கள் பலி
காத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாளத்தில், இரண்டு இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஏழு மலையேற்ற வீரர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்திற்கு, மலையேற்ற சாகசத்திற்காக வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் வருவது வழக்கம். அதன்படி, டோலாகா மாவட்டத்தில் உள்ள யாலுங்ரி மலை சிகரத்திற்கு ஒரு மலையேற்றக்குழு ஏறியது.
கடல் மட்டத்தில் இருந்து, 16 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள அந்த சிகரத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் மலையேற்ற வீரர்கள் தங்கி இருந்தனர். அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் இத்தாலி, கனடா, பிரான்ஸ், ஜெர்மன் நாடுகளைச் சேர்ந்த மலையேற்ற வீரர்களும், நேபாளத்தைச் சேர்ந்த இரண்டு வழிகாட்டிகளும் புதையுண்டனர்.
இதில், 5 பேர் மீட்கப்பட்டு காத்மாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே, மேற்கு நேபாளத்தில் உள்ள பன்பாரி மலையில், கடந்தவாரம் கனமழையின்போது காணாமல் போன இரண்டு இத்தாலிய மலையேற்ற வீரர்கள், கூடாரத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
இதென்ன வெட்டித்தனமான சாகஸ விளையாட்டு?
மலையேற்றம் என்ற பெயரில், இமயமலையை மாசுப்படுத்தியதுதான் அதிகம். மலையேற்றம் பெரிய வியாபாரம். மேற்கு நாட்டு நிறுவனங்கள் போட்டிபோட்டு க்கொண்டு சாகஸ விளையாட்டுக்கு ஆட்களை அனுப்புகிறார்கள்.
குளிர்கால நேரத்தில் மலை ஏற்றம் தேவையா?மேலும்
-
14 இந்தியர்களை திருப்பி அனுப்பிய பாக்.,: ஹிந்துக்கள் என காரணம் சொல்கிறது
-
ஹரியானாவில் யாரும் மேல்முறையீடு செய்யவில்லை: ராகுலின் குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் கமிஷன்
-
கட்டணம் செலுத்தாமல் விமான டிக்கெட்டுகள் ரத்து: புதிய விதிகள் விதித்தது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்
-
போஸ்னியாவில் சோகம்: முதியோர் இல்லம் தீப்பிடித்ததில் 11 பேர் பலி
-
உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம்; ரயில் மோதி ஆறு பேர் பலியான சோகம்!
-
ரூ.5.76 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் பறிமுதல்: தெலுங்கானாவில் அதிகாரிகள் நடவடிக்கை