43 ஆண்டுகளாக சிறையில் இருந்த கொடூர கொலையாளி மரணம்: 5 குழந்தைகள், 4 மனைவியரை கொன்றவர்
வாஷிங்டன்: அமெரிக்காவில், தான் பெற்ற குழந்தைகள், நான்கு மனைவியர் உட்பட 13 பேரை கொன்றதாக, 43 ஆண்டுகளாக சிறையில் இருந்த கொடூர குற்றவாளி ஜார்ஜ் பேங்க்ஸ், 83, சிறுநீரக புற்றுநோயால் உயிரிழந்தார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் வில்க்ஸ்-பாரே நகரைச் சேர்ந்தவர் ஜார்ஜ் பேங்க்ஸ்.
கடந்த 1982-ம் ஆண்டு, மதுபோதையில் இருந்த பேங்க்ஸ், ஒன்று முதல் ஆறு வயது உள்ள பெற்ற குழந்தைகள் ஐந்து பேரையும், நான்கு மனைவியரையும் துடிக்க, துடிக்க துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். மேலும், அவரது வீட்டில் அப்போது விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை.
பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த பேங்க்ஸ், நடந்து சென்ற நான்கு இளைஞர்களையும் சுட ஆரம்பித்தார். இவ்வாறு, 13 பேரை அவர் சுட்டுக் கொன்றுள்ளார். இதன் பின், தன் நண்பர் வீட்டில் தஞ்சம் அடைந்த பேங்க்ஸை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மிக கொடூரமான கொலை குற்றவாளியாக பேங்க்ஸ் கருதப்பட்டார்.
வழக்கை விசாரித்த பென்சில்வேனியா நீதிமன்றம், அவருக்கு மனநலம் சரியில்லை எனக் கூறி ஆயுள் தண்டனை விதித்தது.
இனவெறி சமூகத்தால் ஏற்படும் வலிகளை குழந்தைகள் அனுபவிக்கக்கூடாது என்பதற்காகவே சொந்த குடும்பத்தையே சுட்டுக் கொன்றதாக பேங்க்ஸ் போலீசாரிடம் கூறினார்.
கடந்த, 43 ஆண்டுகளாக அரிசோனா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜார்ஜ் பேங்க்ஸ் சிறுநீரக புற்றுநோயால் அவதிப்பட்டிருந்தார். சமீபத்தில் அவரது உடல்நிலை மோசமான நிலையில், சிறையிலேயே உயிரிழந்தார்.
மேலும்
-
14 இந்தியர்களை திருப்பி அனுப்பிய பாக்.,: ஹிந்துக்கள் என காரணம் சொல்கிறது
-
ஹரியானாவில் யாரும் மேல்முறையீடு செய்யவில்லை: ராகுலின் குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் கமிஷன்
-
கட்டணம் செலுத்தாமல் விமான டிக்கெட்டுகள் ரத்து: புதிய விதிகள் விதித்தது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்
-
போஸ்னியாவில் சோகம்: முதியோர் இல்லம் தீப்பிடித்ததில் 11 பேர் பலி
-
உத்தரபிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்கும் போது விபரீதம்; ரயில் மோதி ஆறு பேர் பலியான சோகம்!
-
ரூ.5.76 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் பறிமுதல்: தெலுங்கானாவில் அதிகாரிகள் நடவடிக்கை