ராணுவத்திற்கு எந்த மதமோ ஜாதியோ கிடையாது; ராகுலுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி
பன்கா; ராணுவத்திற்கு எந்த மதமோ ஜாதியோ கிடையாது என்று ராகுலின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.
பீஹார் முதல் கட்ட சட்டசபை தேர்தல் பிரசாரம் அவுரங்காபாத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்பியும், லோக்சபா தலைவருமான ராகுல், ராணுவத்தை பற்றி கடுமையாக விமர்சித்தார்.
நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் உயர்ஜாதியினர் 10 சதவீதம் பேர் மட்டுமே ராணுவம், நீதித்துறை மற்றும் பெரிய நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்துவதாக குறிப்பிட்டார். எஞ்சிய 90 சதவீதம் மக்களில் உள்ள மற்ற ஜாதியினருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.
இந் நிலையில், ராகுலின் குற்றச்சாட்டுக்கு பாஜ மூத்த தலைவரும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் பதிலடி கொடுத்துள்ளார். பீஹாரில் பன்கா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அப்போது ராஜ்நாத் சிங் பேசியதாவது;
ராணுவத்திற்கு எந்த மதமோ ஜாதியோ கிடையாது; ராணுவ வீரர்களுக்கு ஒரேயொரு மதம் மட்டுமே உள்ளது. அது சைன்ய தர்மம்(சைன்ய என்றால் ராணுவம், தர்மம் என்றால் கடமை, நீதி, நெறிமுறைகள் ஆகியவற்றை குறிக்கும். மகாபாரதத்தின் முதல் அத்தியாயமான சைன்ய தர்சனம் என்னும் போர் துவங்கும் முன் இரு படைகளையும் குறிப்பதாகும்) ஆகும். இதை தவிர வேறு எந்த மதமும் இல்லை.
நம் நாடு நெருக்கடியை கண்ட போதெல்லாம் வீரர்கள் தங்களின் துணிச்சல், வீரம் மூலம் தலை நிமிர செய்தனர். ராணுவத்தை அரசியலுக்குள் இழுக்காதீர்கள்.
நாட்டில் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். நாங்களும் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாளர்கள்தான். ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி இருக்கிறோம்.
ஜாதி, மதம் மற்றும் மதத்தின் அரசியல் தான் நாட்டுக்கு பெரும் தீங்கை விளைவித்துள்ளது. சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினரும் உயர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
ஜாதி, மதம் என்ற அடிப்படையில் பாகுபாடு காட்ட விரும்பவில்லை. நம் நாட்டில் ஞானிகளும், மக்களும் ஒருபோதும் இதை சிந்தித்ததே இல்லை.
ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் அனைத்து பயங்கரவாத நிலைகளையும் அழித்துவிட்டோம். இந்த நடவடிக்கை இன்னமும் முடிவடையவில்லை. தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகளவில் நம் நாடு சக்திவாய்ந்த நாடாக அறியப்படுகிறது. சர்வதேச அளவில் நம் நாட்டின் நற்பெயர் வளர்ந்து உள்ளது.
இவ்வாறு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.
இவன் பேச்சை சாதாரண உளறலாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆபத்து நிறைந்த பின்புலம். ஆபரேஷன் 37 பெரிதாக கை கொடுக்காத நிலையில்,, இப்போது அதிக பட்ச வலிமையில் உள்ள இந்திய ராணுவத்தில் ஜாதியின் மூலம்
பிரிவினியை புகுத்தி பலவீனப் படுத்தச் சொல்லி இவனுக்கு எஜமானின் உத்தரவாம் .
பாஜக அளவு மீறி நியாய தர்மம் பார்க்கிறது...மிலேச்சர்களிடம் தர்மம் நியாயம் பார்க்க தேவையில்லை என்பதுதான் சுக்ர, விதுர, சாணக்கிய, பிருஹஸ்பதி நீதி சாஸ்திரங்களின் கருத்து.
இவரைவிட ஒரு கேவலமான ஆள் நாட்டில் கிடையாது.
ராகுல்கந்தி அமெரிக்கா
டீப் ஸ்டேட் மற்றும் பிபிசியின்
அடியாள் தான்......! தேசத்துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
வேறு நாடாக குறிப்பாக பங்களாதேஷாக இருந்தால் இப்படி பேசியதற்கு அவரை என்கவுண்டர் செய்திருப்பார்கள்,
இந்தியா ராணுவம் ஆன்றும் இன்றும் என்றும் சாதி, மத, அரசியலுக்கு அப்பாற்பட்டது. இந்தியா தான் ராணுவத்தின் உயிர் மூச்சு. வளர்க பாரதம்.
அரசியலில் எத்தனை தலைவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியினராக இருக்கின்றனர் ? ஏன் சோனியாவும் ராகுலும் ஒதுங்கி வழிவிட்டு தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு காங்கிரசில் உயர் பதவிகளை தரவில்லை ? இவர்கள் குடும்பம்தானே இன்னமும் கொலோச்சி வருகின்றனர்
மடத்தனமாக பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ள ராகுல் தேசத்தின் சாபக்கேடு. இந்த கிரகம் காங்கிரசின் கடைசி அத்தியாயம். அறிவுப் பூர்வமாக பேசும் என்று எதிர்பார்ப்பதும் அபத்தம்.
நாட்டில் 50 ஆண்டு காலம் ஆட்சி செய்த போது நீங்கள் எத்தனை சதம் இந்த பின் தங்கிய மக்களுக்கு வாய்ப்பு கொடுத்தேர்கள். அதில் எத்தனை தற்போது மாறி உள்ளது. சரி ஓபிசி reservation கூடாது ன்னு உங்க அப்பா சொன்னாரே அதுக்கு உங்க பதில் என்ன
பசங்களுக்கு பதில் தராதீங்க"?மேலும்
-
சாலை விபத்தை தடுக்க சிறப்பு இயக்கம்: ராஜஸ்தான் அரசு இலக்கு
-
அனில் அம்பானிக்கு அடுத்த சிக்கல்: மத்திய அரசும் விசாரணையை துவக்கியது
-
உலகக்கோப்பையுடன் பிரதமரை சந்தித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்!
-
வந்தே மாதரம் 150வது ஆண்டு நிறைவு: கொண்டாட மஹாராஷ்டிராவில் சிறப்பு ஏற்பாடு
-
மூளையை தின்னும் அமீபா தொற்றுக்கு 4 பேர் பலி: கேரளாவில் அதிகரிக்கும் அச்சம்
-
அதிகரிக்கும் கூட்டநெரிசல் : டில்லியில் நான்கு ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை நிறுத்தம்