ஸ்குவாஷ்: அரையிறுதியில் ராதிகா
சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நியூ சவுத் வேல்ஸ் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற வீராங்கனையாக, இந்தியாவின் ராதிகா சுதந்திர சீலன் 24, பங்கேற்கிறார்.
தமிழகத்தின் சென்னையை சேர்ந்த இவர், காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் கரேன் புளூமை எதிர்கொண்டார். முதல் செட்டை 11-8 என கைப்பற்றிய ராதிகா, அடுத்த செட்டை 11-7 என வசப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய இவர், 3வது செட்டை 11-4 என வென்றார். 22 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ராதிகா 3-0 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் இன்று நியூசிலாந்தின் எம்மா மெர்சனை சந்திக்க உள்ளார்.
அமெரிக்காவில் நடக்கும் செயின்ட் ஜேம்ஸ் எக்ஸ்பிரஸ்சன் ஓபன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் வீர் சோட்ரானி, 3-1 என (11-7, 10-12, 11-5, 11-8) எகிப்தின் முகமது ஷரப்பை வென்றார்.