4 நைஜீரியர்கள் கைது
அவிநாசி: அவிநாசி, சின்னேரிபாளையம், கணேசபுரம் - வைஷ்ணவி கார்டனில், வெளிநாட்டினர் நடமாட்டம் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் போலீசார் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கென்னா மெக்னஸ் 50, ரீடா அவினவோ 43, பிடிலிஸ் ஒனிரீக லோ 46 மற்றும் ஈச்சுக்வு ஜான் 40 ஆகிய நான்கு பேரிடம் விசாரணை நடத்தினார். அதில் பாஸ்போர்ட் மற்றும் விசா காலாவதியான பின்பும் சட்டவிரோதமாக தங்கி இருந்தது தெரிய வந்தது. நான்கு பேரையும் கைது செய்த அவிநாசி போலீசார், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறைக்கு அனுப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நிலநடுக்கத்தால் குலுங்கியது அந்தமான் நிகோபர் தீவுகள்; ரிக்டரில் 6 புள்ளிகளாக பதிவு
-
தந்தையின் பிஸ்டலால் நண்பனை சுட்ட 17 வயது பள்ளி மாணவன்; முன் விரோதத்தால் விபரீதம்
-
கோவா அயர்ன்மேன் போட்டி: நீச்சல், ஓட்டம், சைக்கிள் போட்டிகளில் அசத்திய அண்ணாமலை
-
ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா நேரடி தகுதி
-
உத்தராகண்டிற்கு ரூ.8,260 கோடியில் வளர்ச்சி திட்டம்; வெள்ளி விழாவில் பிரதமர் மோடி பரிசு
-
தென்னாப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
Advertisement
Advertisement