நிலநடுக்கத்தால் குலுங்கியது அந்தமான் நிகோபர் தீவுகள்; ரிக்டரில் 6 புள்ளிகளாக பதிவு

புதுடில்லி: அந்தமான் நிகோபர் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கமானது, இன்று (நவ.9) நண்பகல் 12.06 மணிக்கு ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவு கோலில் 6.02 ஆக பதிவாகி உள்ளதாகவும் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே விவரத்தை ஜெர்மன் நில அதிர்வு மையம் உறுதி செய்து அறிவித்துள்ளது. நில நடுக்கத்தால் ஏதேனும் உயிரிழப்புகள், சேதங்கள் ஏற்பட்டதா என்பது பற்றிய உடனடி விவரங்கள் இல்லை என்றும் தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது.

அந்தமான் நிகோபர் தீவுகள், அதிக நிலநடுக்கங்கள் பதிவாகும் ஆபத்து நிறைந்த மண்டல பகுதியில் உள்ளது, குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஜப்பானின் வடக்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று பதிவாகி இருக்கிறது. இவாட் மாகாணத்தின் கடற்கரையில் இருந்து கடல்மேற்பரப்பில் இருந்து 10 கிமீ ஆழத்தில் பதிவாகி உள்ளது. இதையடுத்து, முன் எச்சரிக்கையாக சுனாமி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement