வரிசையில் நின்றபோது கடித்து குதறிய நாய்: திருச்செந்துாரில் பக்தருக்கு நேர்ந்த சோகம்
துாத்துக்குடி : திருச்செந்துார் முருகன் கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தரை நாய் கடித்து குதறியதால் அவரது காலில் ரத்தம் கொட்டியது. அந்த பக்தர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகா, டாணா பகுதியை சேர்ந்த முத்துராமன், 60, நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்றார். விஸ்வரூப தரிசனம் செய்வதற்காக, 100 ரூபாய் கட்டண வரிசையில் அவர் காத்திருந்தார்.நீண்ட நேரமாக தரிசனம் செய்வதற்கு முத்துராமன் காத்திருந்ததால் ஆங்காங்கே கீழே அமர்ந்து சென்றுள்ளார். உட்பிரகாரத்தில் அவர் வரிசையில் சென்று கொண்டிருந்த போது, அங்கு படுத்திருந்த நாய் ஒன்று திடீரென முத்துராமனை காலில் கடித்துள்ளது.
ரத்தம் கொட்டியதால் கோவில் பணியாளர்கள் அவரை மீட்டு, திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது. அடுத்த 8 மணி நேரத்திற்குள் மீண்டும் தடுப்பூசி போட வேண்டும் என, டாக்டர்கள் கூறியதால் உடனடியாக அவர் அங்கிருந்து சொந்த ஊரான டாணாவிற்கு சென்றுள்ளார்.
அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு சென்ற முத்துராமனை, ஊசி போட்ட பின் டாக்டர்கள் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழகம் முழுதும் ரேபிஸ் பிரச்னை இருந்து வரும் நிலையில், அவருக்கு கூடுதலாக சிகிச்சை அளிக்க வேண்டும் என, டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் உட்பிரகாரத்தில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் ஒருவரை நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
காலையில் வாக்கிங் போவோர் கையில் ஒருபிரம்பு எடுத்துக் கொண்டு செல்வது நல்லது. தெருநாய்கள் கண்ட இடத்தில் கழிக்கிறது. டூவிலர் சக்கரங்கள் மீது சிறுநீர் கழிக்கின்றது.
நாய் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில் அதிகாலை 5 மணி அளவில் வீதிக்கு வருகின்றன. வாக்காளர் திருத்தத்திற்க்கு மத்திய அரசுடன் போராடுவதை கைவிட்டு இதில் முதலில் அரசு கவனம் செலுத்துதல் நல்லது.மேலும்
-
ஈக்வடார் சிறையில் வன்முறை; கைதிகள் 31 பேர் உயிரிழப்பு
-
மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை; இந்திய தூதரகம்
-
எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
-
பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பெண் விஏஓ கைது!
-
பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி; போலீஸ் குடியிருப்பில் நடந்த கொலை பற்றி அண்ணாமலை ஆவேசம்