எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
புதுக்கோட்டை: எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நிருபர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு எதிராக, திமுக கூட்டணி மனுவில் அவர் (பழனிசாமி) ஏன் இணைந்துள்ளார். அவருக்கு வேறு வேலை ஏதும் இல்லை. அதனால் விமர்சனம் வைக்கிறார். அதை பற்றி நான் கவலைப்படவில்லை.
எங்கள் வேலையை நாங்கள் பார்த்து கொண்டு இருக்கிறோம். எஸ்ஐஆர் குறித்து நீதிமன்றத்திற்கு போய் இருக்கிறோம். நாளைக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அதற்கு பிறகு பாருங்கள்.
குற்றச்சாட்டுகள் கூறும் எதிர்க்கட்சிகளுக்கு வேற, வேலை கிடையாது. அதை தான் அவர்கள் செய்து ஆக வேண்டும். எத்தனை முனை போட்டி வந்தாலும், திமுக தலைமையில் இருக்கிற கூட்டணி தான் மாபெரும் வெற்றி பெறும்.
7 வது முறையாக நிச்சயமாக திமுக ஆட்சி அமைக்கும். எதிர்க்கட்சிகளை பலமாகவும் பார்க்கவில்லை, பலவீனமாகவும் பார்க்கவில்லை. நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
திட்டங்கள் தொடக்கம்
முன்னதாக ரூ. 767 கோடி மதிப்பிலான திட்டங்கள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் புதுக்கோட்டைக்கு அறிவித்த 6 புதிய அறிவிப்புகள் பின்வருமாறு:
1. அறந்தாங்கி வீரகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
2. கீரமங்கலம் பகுதி விவசாயிகள் நலன்கருதி காய்கறி குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்
3. வடகாடு ஊராட்சியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும்.
4. புதுக்கோட்டை இளைஞர்களுக்கு ஐடி துறையில் வேலை வாய்ப்பு அளிக்க நியோ டைடில் பார்க் அமைக்கப்படும்.
5. கந்தர்வக்கோட்டை ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும்
6. பொன்னமராவதி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
குற்றச்சாட்டுகள் கூறும் எதிர்க்கட்சிகளுக்கு வேற, வேலை கிடையாது. அதை தான் அவர்கள் செய்து ஆக வேண்டும். உண்மை. அதைத்தானே சற்று அதிகமாக கடினமாக வேலைசெய்தீர்கள் தாங்கள் எதிர் கட்சியாக இருந்தபோது. விதைவைகள் பற்றி தங்கள் சகோதரி டஸ்மாக்கை எதிர்த்து மின்கட்டணத்தை எதிர்த்து தங்கள் குடும்பமே பதாகைகளை ஏந்தியது பெட்ரோல் விலைக்காக தாங்கள் மிதிவண்டியினை மிதித்தது இன்றும் பெட்ரோல் விலை ஜி எஸ் டி அல்ல மாநில வரிப்பட்டியலில் தான் உள்ளது குறைந்தபாடில்லை ஆக டாஸ்மாக் தமிழனை முட்டாளாக்கி அரசாட்சி செயும் தாங்கள் வீழும் நாளில் தமிழகம் தலை நிமிரும்.
கனவு. மக்கா பாத்து
வரும் தேர்தலில் இருந்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் அழிந்ததை போல திமுக அழிய அழுக ஆரம்பிக்கும்
விடியல் ஆட்சி இத்துடன் முடிவடைந்தது. விரைவில் கொலை , கொள்ளை லஞ்சம் வரி உயர்வு இதிலிருந்து விடுதலை.
இதெல்லாம் எப்போ 6மாதங்கள் இருக்கும் நிலையிலா.4.5ஆண்டுகளில் செய்ய முடியவில்லையே..இப்போதா செய்யப் போகிறீர்கள்
தன்னம்பிக்கை முக்கியம்
தளராமல் பார்த்துங்க
நிஜமே.இ வர்களின் பணபலம் ஆள் பலம் யாருக்கும் இல்லை.
சொந்த மாநிலத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள், அராஜகங்கள் கொள்ளை, கொலை போன்றவைகளை பற்றி எதுவும் வாய் திறப்பதில்லை. எப்போது பார்த்தாலும் இந்த ஸ்லோகம் தான் தினமும் சொல்கிறார்.
அதனால்தான் பல முனைபோட்டிகளை பெட்டி கொடுத்து உருவாகட்டுகிறார், இருமுனை போட்டியாகஇருந்தால் திமுக எப்போதும் ஜெயிக்காது.
அப்பா ஏன் எல்லா கட்சியும் தனி தனியாக நின்று பலத்தை காமிக்கலாமே திமுக கூட்டணி இல்லாமல் ஜெயிக்கவே முடியாது
அனைத்து கட்சிகளும் தன்னந்தனியாக போட்டியிட்டாலும் ஜெயிக்கப்போவது திமுக தான்.
ஏனென்றால் அதிமுக, பாமக, பிஜேபி போல் திமுகவில் உட்கட்சி பிளவு கிடையாது.
இன்றளவும் தனிப்பெரும் கட்சியென்றால் அது திமுக தான்.மேலும்
-
டில்லியில் கார் வெடித்து சிதறியதால் பரபரப்பு: மக்கள் அலறியடித்து ஓட்டம்
-
குற்றவாளிகளுக்கு பயமில்லை; தமிழக அரசு மீது நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
செங்கோட்டையன் நீக்கத்தை தொடர்ந்து அதிரடி; கோபியில் அதிமுகவின் புதிய அலுவலகம் திறப்பு
-
இது நாங்கள் போட்ட திட்டம்: மோடி பிரசாரத்தில் நிதீஷ் பங்கேற்காததற்கு பாஜ பதில்
-
ஸ்டாலின் மாடல் என்ன என்ற கேள்விக்கு நாளுக்கு நாள் குலை நடுங்க வைக்கும் கொலைகளே பதில்; இபிஎஸ் காட்டம்
-
கிரிக்கெட் வீராங்கனை ரிச்சா கோஷ் பெயரில் ஸ்டேடியம்: மம்தா அறிவிப்பு