கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
காரைக்கால்: காரைக்காலில் குடிபோதையில் தகராறு சமதானம் செய்யவில்லை என்று மதுபானக்கடை ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் கோட்டுச்சேரி பூவம் மாதா கோவில் தெருவை சேர்ந்த தியாகராஜன், 47; இவர் மதுபானக்கடையில் வேலை செய்து வருகிறார்.இவர் கடந்த 6ம் தேதி இரவு பணியை முடிந்து விட்டு வீடு திரும்பினார். அப்போது கடையில் வேலைசெய்யும் ஆக்கூர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கும் பூவத்தை சேர்ந்த தங்கபாண்டி ஆகிய இருவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது அங்கு குடிபோதையில் வந்த பூவத்தை சேர்ந்த சுதாகர், 40; தியாகராஜனிடம் ஊர் காரனை ஒருவன் அடிக்கிறான் நீ என்னடா சும்மா இருக்கிற என்று ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த தியாகராஜன் மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்றார். பின் சுதாகர் , தியாகரஜன் வீட்டிற்கே சென்று அவரிடம் கத்திய காட்டி கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்.
புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் சுதாகர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
மேலும்
-
காட்டுப்பகுதியில் தயாராகுது பிரமாண்ட மேம்பாலம்: 'நாங்க கட்டல' என கைவிரிக்கும் அரசு துறைகள்
-
வெளிநாட்டு பொருட்கள் மீதான சுங்க வரியை விமர்சனம் செய்வோர் முட்டாள்கள்; டிரம்ப் காட்டம்
-
போராட்டம் நடத்தும் மக்களை குற்றவாளிகளைப் போல நடத்துவதா? ராகுல் ஆவேசம்
-
அணு ஆயுத சோதனை நடத்தும் திட்டம் இல்லை: டிரம்புக்கு ரஷ்யா பதில்
-
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை
-
ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்னை: ஜெ.,வால் முடியாததை ஸ்டாலின் தீர்ப்பாரா?