'மிகப்பெரிய உள்நாட்டு சந்தையே இந்தியாவுக்கு பாதுகாப்பு அரண்'; உலக வங்கி நிபுணர் கருத்து
புதுடில்லி: சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார பிரச்னைகளின் பாதிப்பை, இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு சந்தை தான் குறைத்து விடுவதாக, உலக வங்கியின் முதன்மை பொருளாதார நிபுணர் ஆரேலியன் க்ரூஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பால், நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவுகிறது. இந்நிலையில், இந்திய பொருளாதாரம் உள்நாட்டு நுகர்வையே அதிகம் சார்ந்திருப்பதாகவும், ஏற்றுமதியை அதிகம் நம்பியில்லை என்ற பொருள்படும் வகையில் ஆரேலியன் க்ரூஸ் பேசியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் உள்நாட்டு சந்தை ஏற்கனவே மிகப் பெரியது. எனவே, சர்வதேச நிச்சயமற்ற தன்மையால் ஏற்படும் பொருளாதார பாதிப்பை இது குறைத்து விடுகிறது. உழைக்கும் வயதிலான மக்கள்தொகை போன்ற காரணிகள், வரும் தசாப்தங்களில் இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.வரும் 2050 வரை, உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும்.
@quote@இது விலை மதிப்பற்ற சொத்தாக விளங்குவதோடு, அதீத வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும். சர்வதேச அளவில், வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடரும். quote
இதை பன்னாட்டு நிதியமும், உலக வங்கியும் தொடர்ந்து கூறி வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.30 முதல் 7 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. திறன் வாய்ந்த பொருளாதாரமாக விளங்குவதால், வளர்ச்சி 6 சதவீதத்துக்கு கீழ் குறைய வாய்ப்பில்லை. இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.
பாஞ்சி லட்சம் போட்டா போட்டி போட்டுகுட்டு பொருள் வாங்குவோமே
இந்த சந்தை மீது குறி வைத்து தான் அமெரிக்க மற்றும் சீன நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன இதை அரசியலுக்கு அப்பாற்பட்டு காக்க வேண்டும் . ஐரோப்பிய நாடுகளில் பரஸ்பர வர்த்தக முறை மாற்றாக உதவலாம்.
நேர்மையான பரிவர்த்தனை நிம்மதியாய் இருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. அறுபது ஆண்டுகளுக்கு முன் கீரைக்காரி கீரை விற்பாள். முறத்தில் அரசி வைப்பார்கள் அரசியை டுத்துக்கொண்டு கீரை வைப்பார்கள். இரண்டும் நேர்மையாய் நடைபெறும் சுத்தமாய் இருக்கும். இது அரசுகளுக்கு படிப்பினை.
பாரத நாடு ஆன்மிக பற்றுள்ள நாடு. இதில் தாழ்ந்துபோனால் நாடு மட்டும் நிர்வாகம் மட்டும் கீழ் நிலை அடையும் என்பதில்லை மக்களும் அடைவார்கள்.மேலும்
-
டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு; விசாரணையில் அம்பலம்
-
டில்லி மஹிபால்பூரில் பயங்கர வெடிசத்தம்; தலைநகரில் மேலும் பரபரப்பு
-
டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; உச்சகட்ட பரபரப்பு
-
43 நாள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது: அரசு நிதி மசோதாவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்
-
தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு
-
ஏற்றுமதியை வலுப்படுத்த ரூ.25,000 கோடி செலவில் ஊக்குவிப்பு இயக்கம்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்