டில்லி குண்டுவெடிப்பு சம்பவம்: குற்றவாளிகளின் ரகசிய டைரிகள் சிக்கின
புதுடில்லி: டில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் உமர், முசாம்மில் ஆகியோரின் டைரிகள் சிக்கியுள்ளன. சங்கேத வார்த்தைகளில் எழுதப்பட்ட விவரங்களை கண்டறிய போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகளான உமர், முசாம்மில் ஆகியோரின் டைரிகள் சிக்கியுள்ளன. சங்கேத வார்த்தைகளில் விவரங்கள் எழுதப்பட்டு இருந்தது.
மீட்கப்பட்ட டைரி மற்றும் குறிப்பேடுகளில் இருந்து, பயங்கரவாத தாக்குதல் திட்டம் குறித்த முக்கியமான விவரங்கள் கிடைத்துள்ளன . அவர்கள் நீண்ட காலமாக சதி திட்டம் செய்து கொண்டிருந்தது விசாரணையில் அம்பலமானது.
மீட்கப்பட்ட டைரிகள் மற்றும் குறிப்பேடுகளில் நவம்பர் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலான தேதிகளில் சதி திட்டம் நடத்த குறிப்புகள் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த டைரிகளில் 25 நபர்களின் பெயர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
இவர்களில் பெரும்பாலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் பரிதாபாத்தைச் சேர்ந்தவர்கள். இது குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய சகோதரர்கள் இதர வெளிநாட்டு மதங்களுக்கு ஆதரவாக உள்ள அரசியல் கட்சிகளை இவர்களின் நடவடிக்கையை பொதுமக்களாகிய நாம் சந்தேக கண்களோடு பார்ப்பது தவறு இல்லை.மேலும்
-
தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு
-
நவம்பர் 17ல் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
மேகதாது அணை விவகாரம்; தமிழக அரசிடம் கருத்து கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு
-
பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை; ஜம்மு காஷ்மீரில் 3வது நாளாக நீடிக்கும் ரெய்டு
-
புதுக்கோட்டையில் திடீரென சாலையில் தரையிறங்கிய விமானம்; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
-
டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு; விசாரணையில் அம்பலம்