நான் கொடுத்த கிட்னி அசுத்தமா? லாலுவின் மகள் ரோகிணி உருக்கம்
பாட்னா: “என் அப்பாவுக்கு என் சிறுநீரகத்தை தானம் கொடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்ய வைத்தேன், இன்று அதே சிறுநீரகம் ஒரு சாபக்கேடு என்று எனக்குச் சொல்லப்படுகிறது," என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இச்சூழலில் தம்மை கட்டாயப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியதாக ரோகிணி ஆச்சாராயா தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: குடும்பத்தினர் தன்னை அவமதித்தனர். மோசமான வார்த்தைகளால் திட்டினர், ஒரு கட்டத்தில் செருப்பால் அடிக்க அவர்கள் ஓங்கினர்.
உண்மை, சுயமரியாதையை விட்டுக்கொடுக்கவில்லை. அந்த அவமானத்தை தாங்கி கொள்ள வேண்டியிருந்தது. பெற்றோர் லாலு- ராப்ரி மற்றும் சகோதரிகள் அழுது கொண்டிருக்க, கட்டாயப்படுத்தி தாய்வீட்டில் இருந்து பிரித்து விட்டார்கள். என்னை அனாதையாக விட்டுவிட்டார்கள்.
நீங்கள் ஒருபோதும் என்னை போல் தவறு செய்ய கூடாது. ரோகிணியை போல மகள் எந்த குடும்பத்திலும் இருக்க கூடாது. இவ்வாறு ரோகிணி கூறியுள்ளார்.
கிட்னி அசுத்தமா?
மற்றொரு பதிவில், 2022ல் தந்தை லாலு பிரசாத்துக்கு சிறுநீரக தானம் கொடுத்ததை பற்றி மனதை புண்படுத்தும் வகையில் குடும்பத்தினர் பேசியதாக ரோகிணி கூறியுள்ளார்.
அதில், "என்னை அவர்கள் சபித்தனர். கோடிக்கணக்கான பணம் மற்றும் லோக்சபா சீட் வாங்கிக்கொண்டு கிட்னி கொடுத்ததாகவும், அது அசுத்தமான கிட்னி என்று குடும்பத்தினர் திட்டினர்.
திருமணமான அனைத்து மகள்கள், சகோதரிகளுக்கு ஒன்றை சொல்கிறேன். உங்களுக்கு சகோதரன் இருந்தால், நீங்கள் கடவுளாக நினைக்கும் தந்தையை கூட காப்பாற்ற நினைக்காதீர்கள்.
சகோதரன் அல்லது அவருடைய நண்பர்களுடைய கிட்னியை தானம் தரச்சொல்லுங்கள். என் கணவர் மற்றும் குடும்பத்தினர் அனுமதி இல்லாமல் சிறுநீரகம் தானம் செய்தது பெரும் பாவம் ஆகிவிட்டது.
நான் கடவுளாக நினைக்கும் அப்பாவை காப்பாற்ற நான் கொடுத்த சிறுநீரகத்தை அசுத்தம் என்கிறார்கள். உங்களில் யாரும் என்னை போல் தவறு செய்துவிடக்கூடாது. இவ்வாறு ரோகிணி ஆச்சார்யா கூறியுள்ளார்.
குடும்பத்தில் நடக்கும் செய்திகள் வெளியில் தெரிவது, அந்த குடும்பத்திற்கு அசிங்கம் தான்: ஆனால் அரசியல்வாதிகளுக்கு அசிங்கம் கிடையாது ஒரு நாள் செய்தி அவ்வளவே. மனக்கசப்பு நாளடைவில் விலகும்: கிட்னி தானம் செய்ததை எண்ணி பெருமைப் பட்டவர் இன்று அதே விஷயத்தை எண்ணி வருத்தப்படுகிறார். தோல்வியுற்ற கட்சியின் தொண்டர்களை மேலும் இது தளர்வடைய செய்யும். பாவம்.
தேர்தலில் தோற்றவுடன் சகோதரி சகோதரன் இடையில் பெரிய அளவில் சண்டை ஏற்பட்டு கட்சியிலும் குடும்பத்திலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் இங்கே அதிமுக தோற்கும் போது கட்சியில் பெறும் குழப்பம் ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து விடும்.
அம்மா ரோகிணி ஆச்சார்யா நீ கவலை படாதே உன்மனசுக்கு நீ நல்ல இருப்பே அவர்கள் தான் அழுக்கு ..நீ செய்தது மிக பெரிய விஷயம் அப்பாவுக்கு கிட்னி தானம் கொடுத்தது ..
மகள்களுக்கு தந்தை தான் எல்லாமே.
கடவுள் தங்கள் பக்கம் இருப்பார்கள். மனம் வேதனை படுகிறது படிக்கும் போது.
லாலு குடும்ப குழப்பம் , லாலு கண்ணீர் . குடும்ப குழப்பம் , கண்ணீர் பேட்டி . இறைவன் எதையோ உணர்த்துகிறான்.மேலும்
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு மருத்துவர் இல்லாத அவலம்
-
சுவாமியே சரணம் ஐயப்பா-1: தினம் ஒரு தகவல்: அதிர்ஷ்டம் உண்டாக...
-
தொழிற்சாலையில் தீ விபத்து: இரு தொழிலாளர்கள் படுகாயம்
-
கும்மிடி அரசு மருத்துவமனையில் கட்டுமான பணிகள் விறுவிறு
-
மேய்ச்சல் ஆடுகளை குறிவைக்கும் நாய்கள்: மர்ம நபர்களும் திருடுவதால் மக்கள் பீதி
-
வண்டிப்பெரியாறில் பரிசல் சவாரிக்கு வனத்துறை தடை