பெண் தபால் ஊழியரிடம் செயின் பறித்தவர் கைது
திண்டிவனம்: ஸ்கூட்டியில் வந்த பெண் தபால் ஊழியரிடம் செயின் பறித்த வழக்கில் தேடப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனத்தில் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த பெருவளூரைச் சேர்ந்த அம்மாவாசை மகன் தங்கவீரன், 30; என்பதும், கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தொழுப்பேடு தபால் நிலையத்தில் பணிபுரியும் பெண் போஸ்ட் மாஸ்டர் இந்துமதி, 38; என்பவரிடம் செயின் பறித்து சென்ற வழக்கில் தேடப்பட்டவர் என்பது தெரிய வந்தது.
அதையடுத்து தங்கவீரனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வாரத்திற்கு 72 மணி நேர வேலை செய்யணும்; சீனாவை மேற்கோள் காட்டிய நாராயண மூர்த்தி
-
சாலைகளுக்கு ஜாதி பெயர் மாற்றும் அரசாணை: டிச.,10 வரை இடைக்கால தடை நீட்டிப்பு
-
ஐ என் டி யூ சி தலைவர் தேர்வு
-
நவ., 21ல் 7 மாவட்டம், நவ.,22ல் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
டில்லி குண்டு வெடிப்பை நிகழ்த்திய சதிகாரன் உமரின் பழைய வீடியோ!
-
அட்டகாசமான அரட்டை செயலியை உடனே அப்டேட் செய்யுங்க; பயனர்களுக்கு ஸ்ரீதர்வேம்பு அறிவுறுத்தல்
Advertisement
Advertisement