நவ., 21ல் 7 மாவட்டம், நவ.,22ல் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் நவம்பர் 21ம் தேதி 7 மாவட்டங்களிலும், நவம்பர் 22ம் தேதி 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


வங்கக்கடலில் ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, 22ம் தேதி உருவாக உள்ளது. இந்நிலையில் இன்று (நவ., 18) திருநெல்வேலி மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

இன்று கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* கன்னியாகுமரி

* தென்காசி

* தூத்துக்குடி

* ராமநாதபுரம்

* விருதுநகர்

* தேனி

* சிவகங்கை

* மதுரை

கடலூர், மயிலாடுதுறை ஆகிய இரண்டு மாவட்டங்ளில் நாளை (நவ.,19), நாளை மறுநாள் (நவ.,20) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 21ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* கடலூர்

* மயிலாடுதுறை

* நாகை

* ராமநாதபுரம்

* தூத்துக்குடி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

நவம்பர் 22ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* கடலூர்

* மயிலாடுதுறை

* திருவாரூர்

* நாகை

* தஞ்சாவூர்

* புதுக்கோட்டை

* சிவகங்கை

* ராமநாதபுரம்

* தூத்துக்குடி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

நவம்பர் 23ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* கன்னியாகுமரி

* திருநெல்வேலி

* தூத்துக்குடி

* ராமநாதபுரம்

* புதுக்கோட்டை

* தஞ்சாவூர்

* திருவாரூர்

* நாகை

* மயிலாடுதுறை

* கடலூர்

* விழுப்புரம்

* செங்கல்பட்டு

* காஞ்சிபுரம்

* சென்னை

* திருவள்ளூர்

நவம்பர் 24ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருவள்ளூர்

* சென்னை

* காஞ்சிபுரம்

* செங்கல்பட்டு

* விழுப்புரம்

* கடலூர்

* அரியலூர்

* மயிலாடுதுறட

* திருவாரூர்

* தஞ்சாவூர்

* நாகை

* புதுக்கோட்டை

* சிவகங்கை

* ராமநாதபுரம்

* தூத்துக்குடி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement