வாரத்திற்கு 72 மணி நேர வேலை செய்யணும்; சீனாவை மேற்கோள் காட்டிய நாராயண மூர்த்தி
நமது நிருபர்
இந்தியா வேகமாக வளர இளம் இந்தியர்கள் அதிக நேரம் உழைக்க வேண்டும். வாரத்திற்கு 72 மணி நேர வேலை செய்யுமாறு சீனாவின் 9-9-6 வேலை நேர அட்டவணையை மேற்கோள் காட்டி, இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக, ஆங்கில செய்தி சேனலுக்கு, நாராயண மூர்த்தி அளித்த பேட்டி: சீனாவை போல் உற்பத்தி துறையில், நமது நாடு இதே வேகத்தில் முன்னேற வேண்டுமென்றால் இளம் இந்தியர்கள் கடினமாக உழைக்கத் தயாராக இருக்க வேண்டும்.
சீனாவில் ஒரு பழமொழி உண்டு, 9, 9, 6. அதன் அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா? காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, வாரத்தில் 6 நாட்கள். அது 72 மணி நேர வாரம். இந்திய இளைஞர்கள் இதேபோன்ற வேலை நேரத்தைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு நாராயண மூர்த்தி கூறினார்.
அது சாத்தியம்
உற்பத்தியிலோ அல்லது பிற துறைகளிலோ இந்தியா சீனாவை யதார்த்தமாக முந்த முடியுமா என்ற கேள்விக்கு, ''அது சாத்தியம் என்று நான் நம்புகிறேன். ஆனால் அதற்கு தொடர்ச்சியான முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் அது சாத்தியமாகும். இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி சரியான வேகத்தில் தான் செல்கிறது.
தற்போது ஆறு மடங்கு பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவைப் பிடிக்க சமூகத்தின் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பு தேவைப்படும். வேலை எளிதானது அல்ல என்பதை நாம் உணர வேண்டும். இவ்வாறு நாராயண மூர்த்தி பதில் அளித்தார். 9-9-6 சீனாவில் சில நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படும் பணி நேர அட்டவணை.
பணியாளர்கள் வாரத்திற்கு 6 நாட்கள், காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை வேலை செய்ய வேண்டும் என்பதை தான் 9-9-6 குறிக்கிறது. சீனாவின் அலிபாபா மற்றும் ஹவாய் போன்ற நிறுவனங்களில் இந்த நடைமுறை பிரபலமடைந்தது, குறிப்பிடத்தக்கது.
நீங்கள் சாப்ட் வேர் கம்பெனி .எப்படி வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம். எல்லோருக்கும் அதே படிப்பினையை சொல்லக்கூடாது . சுயநலத்துக்காக எப்படி வேண்டுமானாலும் பேசக்கூடாது .இது AI "CONCEPT" உள்ள காலம்.தயவு செய்து பார்த்து பேசவும்.மக்களின் உழைப்பை மறைமுகமாக உறிஞ்சவேண்டாம் . .
நீங்கள் உங்களுக்காக வேலை செய்யவில்லை .அரசியல் வாதிகளின் மற்றும் அரசு ஊழியர்களின் நலனுக்காகவும் உங்கள் உழைப்பு மறைமுகமாக உறிஞ்சப்படுகிறது. .இதெல்லாம் தெரியாத மரமண்டையந்தான் நீங்களெல்லாம்....மானங்கெட்ட உழைப்பு
ஏற்கனவே, நிறையப்பேரு பணத்துக்காக அவர்களுடைய உடல் நலத்தை கெடுத்துகிட்டு, குடும்பத்த்தையும் விட்டுட்டு, உறவுகளையும் மறந்துட்டு மந்திரிச்சியுட்ட மாதிரி வேலை செய்யுறாங்க. கார்பொரேட்டின் பொருளாதாரம் உச்சம் பெற வேண்டும் என்ற பேராசையில், 1. நோயுள்ள மனித சமுதாயத்தை உருவாக்காதே. 2. குடும்ப கலாச்சாரத்தை சீரழிக்காதே, உறவுகளை அழிக்காதே. 3. மக்களையம் சமுதாயத்தையும் நோய்வாய்படுத்தி, மண்ணையும் மரத்தையுமா கட்டி ஆளமுடியும்?.
" நோயற்ற வாழ்வே, குறையற்ற செல்வம்".
ஒரு செய்தின்னு வெளியிட்டு கொஞ்சம் பேருக்கு BP ஏத்தி விட்டுடீங்க.
நாராயணசாமியை இந்த அளவுக்கு நமது நல்ல வாசகர்கள் கழுவி ஊற்றுவார்கள் என்று நினைக்கவில்லை. குடும்பத்தையும் மகிழ்ச்சியையும் தொலைத்துவிட்டு ஒரு வாழ்க்கை தேவையில்லை என்று மக்கள் உணர்ந்து வருகிறார்கள். ஓய்வுடன் கூடிய கடின உழைப்பை சிந்தியுங்கள் தொல்லதிபர்களே.
கவன ஈர்ப்பு கருத்து. எட்டு மணி நேரம் ஒழுங்கா வேலை பார்த்தாலே போடும், நாடு முன்னேறும். ஏ சி ரூமில் உட்கார்ந்து வருடம் தோறும சொத்து மதிப்பு கோடி கோடியாக உயர்ந்தால் பேச்சு இப்படி தான் இருக்கும்.
தனியார் நிறுவனங்களில் ஒரு நாளைக்கு 10 மணி நேரத்துக்கு மேலாக வேலை வாங்குகின்றனர்.. இதுவே வீட்டிலிருந்து வேலை செய்தால் 12 மணிநேரமாக செய்கிறார்கள்.
இன்போசிஸ் பங்குகள் விலை உயரும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பணக்காரர் வரிசையில் ஒருபடி முன்னேறலாம். உழைப்பவனுக்கு பலன் என்ன? சீனாவை போல அரசியல்வாதிகள் இருக்க வேண்டும் என சொல்லிப்பாருங்கள். அதிகாரிகள் சீனர்களை போல இருக்கவேண்டும் அமைச்சர்கள் சீனர்கள்போல இருக்கவேண்டும் தொழில் துவங்கும் வசதி அவர்களைப்போல இருக்கவேண்டும் இறுதியாகத்தான் தொழிலார்கள் வரவேண்டும். நாராயணமூர்த்தி அவர்களே முதலில் அரசு மற்றும் அதிகாரிகளை சீனர்கள் போல இருக்கவேண்டும் என ஆரம்பியுங்கள்
உற்பத்தித்துறையில் நிலவும் மனிதவள பற்றாக்குறை சரிசெய்யப்படவேண்டும். இங்கே சேவை துறை இன்னும் வளர்ச்சி பெற வேண்டியுள்ளது. அர்ப்பணிப்புடன் பணிபுரியும் மனிதவளம் இங்கே குறைவு. அதனால்தான் நாம் எதிர்பார்க்கும் பொருளாதார வளர்ச்சி இங்கே வரவில்லை. ஜாதி மத மற்றும்
சமூக கட்டமைப்புகள், அரசியல், போக்குவரத்து ஆகியவை பெரும்பாலான மனித நேரங்களை கபளீகரம் செய்துவிடுகின்றன. எனவே அவற்றை மேம்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும். வாரத்துக்கு 72 மணி நேரம் எல்லாம் தேவையில்லை. தினமும் 8 மணி நேர வேலையே போதும்.
இன்னும் பூமியில் வாழ்ந்து வருவதால், இந்தியா இன்னும் வளர்ந்த நாடாக இல்லாமல் வளரும் நாடாகவே உள்ளது.மேலும்
-
ஸ்ரீசத்யசாய்பாபா நூற்றாண்டு விழா: நாளை சிறப்பு நாணயம் வெளியிடுகிறார் பிரதமர் மோடி
-
10வது முறையாக பீஹார் முதல்வர்; நவ.,20ல் பதவியேற்கும் நிதிஷ்!
-
பயங்கரவாதத்துக்கு எதிராக கண்துடைப்பு நடவடிக்கை கூடாது: ஜெய்சங்கர்
-
பீஹாரில் ரூ.10 ஆயிரம் கொடுத்தது போல தமிழகத்திலும் தர வாய்ப்பு: சீமான்
-
தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்; நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
-
மும்பை வரை நீண்ட டில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு; சிக்கிய 3 சந்தேக நபர்களிடம் தீவிர விசாரணை