கல் குவாரி லாரிகள் சிறைபிடிப்பு
திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா திருமால் கிராமத்தில் 5 க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்கி வருகிறது. இவற்றால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி திருமால், புதுார், மொச்சிகுளம், தும்பக்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருமால் கிராமத்தின் வழியாக அதிக அளவில் கல் மற்றும் மண் லோடுகளை ஏற்றி வந்த மூன்று லாரிகளை திருமால், பாறைக்குளம் ரோட்டில் கிராம மக்கள் சிறை பிடித்தனர். அவர்களிடம் கூடக்கோவில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி லாரிகளை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். பொதுமக்கள் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து கலந்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈமச்சடங்கு பணம் வழங்க லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது
-
கோவிலில் வகுப்பு நடக்கும் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு
-
டில்லி கார் குண்டு வெடிப்பு பயங்கரவாதி சென்னையில் தங்கினாரா என விசாரணை
-
'போக்சோ' வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு 'பிடிவாரன்ட்'
-
மின் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்
-
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் டிசம்பரில் முதற்கட்ட ஆய்வு
Advertisement
Advertisement