மாநில வில் வித்தை சென்னை வீராங்கனை தங்கம்

சென்னை: தமிழ்நாடு வில் வித்தை சங்கம் சார்பில், மாநில அளவிலான வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டி, சென்னையில் உள்ள ஸ்ரீசாய்ராம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த, 80-க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.

இதன் மகளிர் சீனியர் காம்பவுண்ட் பிரிவில், மேடவாக்கத்தைச் சேர்ந்த நேஹாஸ்ரீ, 15; அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். மேலும், இதே போட்டியில் நடந்த தேசிய போட்டிக்கான தகுதிச்சுற்றின் சீனியர் மற்றும் ஜூனியர் காம்பவுண்ட் பிரிவுகளில் முதலிடம் பிடித்து, தேசிய போட்டியில் தமிழக அணிக்காகப் போட்டியிடும் தகுதியையும் பெற்றுள்ளார்.

Advertisement