வில்லிவாக்கத்தில் இருந்து தி.மலைக்கு திருக்குடை யாத்திரை
வில்லிவாக்கம்: ஹிந்து ஆன்மிக சேவா ஸ்மிதி டிரஸ்ட் சார்பில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு திருக்குடை யாத்திரை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி, திருமுல்லைவாயிலில் இருந்து வந்த திருக்குடை யாத்திரை, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில் வழியாக, ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவில் வந்தடைந்தது.
அங்கிருந்து நேற்று காலை 8:30 மணிக்கு, வில்லிவாக்கம், அகத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜையுடன் திருக்குடை யாத்திரை துவங்கி, ஐ.சி.எப்., முத்து மாரியம்மன் கோவில், காந்தி நகர் வழியாக, அன்னை சத்யா நகர் குபேர லிங்கேஸ்வரர் கோவில், அண்ணா நகர் சிந்தாமணி விநாயகர் கோவில், மாங்காலி அம்மன் கோவில் வழியாக சென்றது.
என்.எஸ்.கே., வழிவிடு விநாயகர் கோவில், எம்.எம்.டி.ஏ.,காலனி முத்துமாரியம்மன் கோவில் வழியாக, வடபழநி முருகன் கோவிலுக்கு சென்றது.
வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த தேங்காய் கடை ரா.கிட்டு, சந்திரவடிவேல், லோகநாதன், பார்த்தசாரதி, சீனிவாசன், ராஜகுமார், சரவணன் உள்ளிட்டோர், ஹிந்து ஆன்மிக சேவா டிரஸ்ட் பொதுச்செயலர் இளைய மடாதிபதி லிங்கேசனுக்கு மரியாதை செய்து, திருக்குடையை வரவேற்று வழிபட்டனர்.
மேலும்
-
கோபி, நம்பியூரில் சாரல் மழை
-
2 பெண்கள் உள்பட மூன்று பேர் மாயம்
-
கார் டிரைவரால் விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு அமைச்சர் உதவி
-
ரயில்வே ஸ்டேஷனுக்கு வழித்தடத்துடன் காளை மாட்டு சிலை சிக்னல் விரிவாக்கம்
-
ஈரோடு-சேலம் இடையே மீண்டும் 'மெமு' ரயில்
-
ஓய்வு பேராசிரியை வீட்டில் மீண்டும் திருட்டு கண்காணிப்பு வளையத்தில் பழங்குற்றவாளி