சுயதொழில் பொருள் விற்பனையகம் ரூ.33 லட்சத்தில் துவக்கம்
மடிப்பாக்கம்: பெருங்குடி மண்டலம், வார்டு 188க்கு உட்பட்டது மடிப்பாக்கம். இங்கு, 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மகளிர் சுயதொழில் உற்பத்தி பொருட்கள் விற்பனையகம் அடங்கிய பல்நோக்கு கட்டட பணி, நேற்று காலை 11:00 மணிக்கு, பூமி பூஜையுடன் துவங்கியது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:
மடிப்பாக்கம் பகுதியில் நுாலகம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதன்படி, மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில், பொது மக்கள் பயனடையும் வகையில், குறிப்பாக பெண்கள் தாங்கள் சுயமாக தயாரித்த பொருட்களை, தாங்களே நேரடியாக விற்பனை செய்யும் மையம் கட்ட முடிவானது.
அதனுடன், நுாலகம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கான பல்நோக்கு கட்டடம், 1,000 சதுர அடி பரப்பளவில், கவுன்சிலரின் மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ரஷ்யாவில் குண்டுவெடிப்பு: போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலி
-
31 ஏக்கர் நிலம், 1 கிலோ தங்கம்... மொத்தம் ரூ.100 கோடி சொத்து; வசமாக சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர்
-
பகையை மறந்து ஒன்று சேர்ந்த தாக்கரே சகோதரர்கள்; மஹா., உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி அறிவிப்பு
-
ஈவெராவும் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை வேஷமும்: போட்டுத் தாக்கிய இஸ்லாமிய பெண்
-
ஜீவகாருண்யத்திற்கு முளை்த்த சிறகுகள்
-
வங்கதேச தேர்தலில் ஜெயிக்க சதி: முகமது யூனுஸ் மீது குற்றச்சாட்டு