கோவில் மேற்கூரை இடிப்பு; தாசில்தாரிடம் மனு வழங்கல்
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி சுவேத நதியை ஒட்டி, ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற கோவில் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த சூர்யா உள்ளிட்டோர், பாதையில் இடையூறாக உள்ளதாக கூறி, பொக்லைன் மூலம் கோவில் மேற்கூரையை அகற்றினர். இதனால் மக்கள், சாலை மறியலில் ஈடுபட்ட முயன்றதால், பொக்லைன் வாகனத்தை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் நேற்று ஆணையாம்பட்டி மக்கள், கோவில் மேற்கூரை இடித்தது குறித்து, தாசில்தார் நாகலட்சுமியிடம் மனு அளித்தனர். அதற்கு அவர், 'ஆற்றின் பகுதியில் கோவில் உள்ளது. இடையூறு இல்லாத இடத்தில் கோவில் அமைக்க, உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கூரையை இடித்தவர்கள் மூலம், புது இடத்தில் அமைக்கும் கோவிலுக்கு மேற்கூரை அமைத்து கொடுக்கப்படும்' என்றார். இதை ஏற்று மக்கள் சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்யாவில் குண்டுவெடிப்பு: போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலி
-
31 ஏக்கர் நிலம், 1 கிலோ தங்கம்... மொத்தம் ரூ.100 கோடி சொத்து; வசமாக சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர்
-
பகையை மறந்து ஒன்று சேர்ந்த தாக்கரே சகோதரர்கள்; மஹா., உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி அறிவிப்பு
-
ஈவெராவும் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை வேஷமும்: போட்டுத் தாக்கிய இஸ்லாமிய பெண்
-
ஜீவகாருண்யத்திற்கு முளை்த்த சிறகுகள்
-
வங்கதேச தேர்தலில் ஜெயிக்க சதி: முகமது யூனுஸ் மீது குற்றச்சாட்டு
Advertisement
Advertisement