விவசாயியிடம் ரூ.2,000 லஞ்சம் : பெண் வேளாண் அதிகாரி கைது
திண்டுக்கல்: பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் பணம் வருவதற்கு, ஆன்லைனில் பதிவு செய்ய, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் உதவி வேளாண் அலுவலரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பிலாத்து ஆண்டிக்குளத்தை சேர்ந்த விவசாயி கருப்பையா, 60. இவருக்கு பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில், இரு ஆண்டுகளாக பணம் வரவில்லை. வட மதுரை உதவி வேளாண் அலுவலர் சந்திரலேகா, 39, என்பவரிடம் புகார் செய்தார். ஆன்லைனில் பதிவு செய்து தர, சந்திரலேகா 2,500 ரூபாயை, கருப்பையாவிடம் லஞ்சமாக கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்பையா, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரைப்படி இன்று( டிச.,24) காலை வடமதுரை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் சந்திரலேகாவிடம், 2,000 ரூபாயை கொடுத்தார்.
மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சந்திரலேகாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து
இவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்
திராவிட இட ஒதுக்கீடு 50 உச்ச வரம்பு மேல் 69 சதவீதம் . உள் ஒதுக்கீடு. பலன் அரசு நிர்வாக சேவையில் தெரிகிறது. திமுக லஞ்சம் பெற்று படிக்கவைத்த திராவிடர் மக்களுக்கு சேவை செய்ய எண்ணம் குறைவு. நடப்பில் வெளி மாநிலம், வெளி நாட்டில் தஞ்சம். சுக போக வாழ்க்கை. ஓட்டு போட ஆள் பற்றாக்குறை? உழைக்க ஆள் இல்லை. லஞ்சம் அதிக பாதிப்பு தராது. மாநிலம் முழுவதும் லஞ்சம்.
என்னமோ இவர் ஒருவர்தான் லஞ்சம் வாங்கியது மாதிரி ஆச்சர்ய படுறாங்க. 90 % பேர் லஞ்சம் வாங்குறாங்க நாம் யாராவது ஒருவர் ஒரு அரசு அலுவலகத்தில் லஞ்சமில்லாமல் ஒரு வேலை முடித்து கொண்டு இருக்கிறோமா ? இவர் மாட்டி கொண்டார் அவ்வளவுதான் இதுவரை மாட்டி கொண்டவர்களுக்கு அளித்த தணடனையை பிரசுரிங்க பார்க்கலாம்
Law should be enacted to dismiss from the job if anyone found guilty of bribe and corruption immediately and also confiscate their qualification
விசாரணையென்ன கேடு. உள்ள்தள்ளி பெண் போலீசை வைத்து மிதி.மேலும்
-
இந்தியா - சீனா இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம்; பென்டகன் கணிப்பு
-
10 வேட்பாளர்களின் பெயர் சொல்ல முடியுமா? விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஏற்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ப்பு; போலீஸ் அதிர்ச்சி
-
வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 டிரோன் கோவையில் பறிமுதல்
-
சன்சாத் கேல் மஹோத்சவ் விழா நிறைவு: கோவை மாணவி நேசிகாவுடன் உரையாடிய பிரதமர் மோடி