10 வேட்பாளர்களின் பெயர் சொல்ல முடியுமா? விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
கிருஷ்ணகிரி: 234 தொகுதிகள் உள்ள நிலையில் 10 வேட்பாளர்களின் பெயர்களை விஜயால் சொல்ல முடியுமா? என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: இந்தியாவையே நாளை பிடித்து விடுவேன் என்றுகூட விஜய் சொல்லலாம். விஜய் சொல்லி கொண்டே இருக்கிறார். இது சினிமா அல்ல. தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும். வேட்பாளர்கள் போட வேண்டும்.
போடக் கூடிய வேட்பாளர் விலை போகாமல் இருக்க வேண்டும்.
அவர்களுடைய பூத் பொறுப்பாளர்கள் விலை போகாமல் இருக்க வேண்டும். பூத் பொறுப்பாளர்கள் இல்லை. கட்டமைப்பு இல்லை. யார் வேட்பாளர் என்று அவர்கள் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது. 234 தொகுதிகள் இருக்கிறது. வரிசையாக 10, 15 பேர் பெயரை விஜயால் சொல்ல சொல்லுங்கள் பார்க்கும். நான் குறை சொல்லவில்லை.
அவர் அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கும். நான் இல்லை என்று மறுக்கவில்லை. பாஜ என்பது மிகப்பெரிய கட்சி. 272 பார்லிமென்ட் எம்பிக்கள் இருக்கிறோம். 3 முறை முதல்வராக இருந்தவர், 3வது முறை பிரதமராக இருந்து மிகப்பெரிய சக்தியாக மோடியின் புகழும், பெருமையும், திறமையும் எங்கே இருக்கிறது. தமிழகத்தில் சினிமா நடிகராக இருக்கும் விஜய்க்கு எங்கே இருக்கிறது? கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
முதலில் உங்கள் எதிரி யார் என்று தீர்மானம் செய்யுங்கள்.. விஜய் எதிர்த்து எல்லாம் அரசியல் செய்யாதீர்கள்..அதிமுக கட்சிக்கும், பாஜக கட்சிக்கும் ஒரு ஓட்டு வங்கி உள்ளது.. அதில் எந்த மாற்றமும் ஏற்படாது.. ஆனால் விசிகவின் பட்டியல் ஓட்டுக்களும், திமுக சிறுபான்மை ஓட்டுக்களும் கண்டிப்பாக விஜய்க்கு செல்லும்.. எனவே விஜய் தனித்து நின்றாலும், கூட்டணி அமைத்து நின்றாலும் பாதிப்பு திமுக கூட்டணிக்கு தான்.. நீங்கள் எதற்கு அவரை எதிர்த்து அரசியல் செய்கிறீர்கள்..
அதே கேள்வியை திரும்ப அவங்க உங்கள கேட்டால் சொல்ல முடியுமா நைனார் ஜி ?
நயினார் தன் கட்சியில் தமிழ்நாட்டில் நின்று ஜெயிக்க கூடிய பத்து வேட்பாளர்கள் பெயரை சொல்லட்டும்.மேலும்
-
பாதுகாப்பு படையினர் என்கவுன்டர்: ஒடிசாவில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவன் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை
-
17 ஆண்டுக்கு பின் வங்கதேசம் திரும்பினார் கலிதா ஜியா மகன்
-
மருத்துவமனையில் 8 மணி நேரம் காத்திருப்பு: கனடாவில் இந்திய வம்சாவளி இந்தியர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
-
பஸ்கள் பராமரிப்பில் திமுக அரசின் அலட்சியத்தால் தொடர் விபத்துகள் : அண்ணாமலை குற்றச்சாட்டு
-
இந்தியா - சீனா இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம்; பென்டகன் கணிப்பு
-
சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஏற்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்