ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தேசிய நுகர்வோர் தின விழா

கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தேசிய நுகர்வோர் தின விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். கல்லுாரி டீன் அசோக் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் கோமதி, நகராட்சி துணை கமிஷ னர் கருணாநிதி வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளர்களாக நகராட்சி கமிஷனர் சரவணன், கள்ளக்குறிச்சி நுகர்வோர் சங்க செயலாளர் அருண்கென்னடி மற்றும் மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சுப்ரமணியன் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

நுகர்வோரின் கடமைகளும், உரிமைகளும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி தினமும் கடையில் வாங்கும் பொருட்களின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, விலை ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும், பொருளுக்கான 'பில்' வாங்க வேண்டும் என கூறி மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.

Advertisement