இரு மடங்காக அதிகரித்த தக்காளி விலை
ஒட்டன்சத்திரம்: வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை இருமடங்காக அதிகரித்து கிலோ ரூ.64 க்கு விற்பனை ஆனது.
ஒட்டன்சத்திரம், சாலைப்புதூர், அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், பெரிய கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை அறுவடை மும்முரமாக இருந்ததால் வரத்து அதிகரித்து தக்காளி கிலோ ரூ.32 க்கு விற்றது. இந்நிலையில் தற்போது பல இடங்களில் அறுவடை குறைந்ததால் மார்க்கெட்டுக்கு வரத்து குறைய தொடங்கியது. இருந்தபோதிலும் வியாபாரிகள் கொள்முதல் அளவை குறைக்காமல் இருந்ததால் விலை இருமடங்காக அதிகரித்து ரூ.64 க்கு விற்பனை ஆனது. கமிஷன் கடை உரிமையாளர் முருகேசன் கூறுகையில், 'இனிவரும் நாட்களில் தக்காளி வரத்து குறைய வாய்ப்பு உள்ளதால் விலை மேலும் அதிகரிக்கும்' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா விஸ்வகுருவாக மாற வேண்டும்; மோகன் பாகவத் விருப்பம்
-
தி.மலையில் தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருப்பு
-
யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென மக்களுக்கு தெரியும்: நடிகர் விஜய் பேச்சு
-
பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்: இபிஎஸ் மீண்டும் வலியுறுத்தல்
-
ஆப்பரேஷன் சிந்தூரில் பயத்தில் உறைந்த பாக்., தலைவர்கள்: அதிபர் சர்தாரி ஒப்புதல்
-
வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்ளாத ராகுல்; உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்
Advertisement
Advertisement