டாஸ்மாக் மூலம் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கினர். இதன் மூலம் 22 ஆயிரம் கோடி மேலிடத்தக்கு சென்றது.
உள்ளாட்சி துறையில் ஊழல் நடந்துள்ளது. வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என இரண்டு முறை அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. ஆனால் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஊழல் நிறைந்த அரசு திமுக அரசு.
பச்சைப்பொய்
அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட லேப்டாப் திட்டத்தை திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறுத்திவிட்டது. தற்போது தேர்தல் வரப்போவதால், கல்லூரி மாணவர்களை தேர்வு செய்து 10 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்குவதாக தெரிவித்துள்ளது. இன்னும் வரவில்லை. அது பச்சைப்பொய். இளைஞர்கள், மக்களின் செல்வாக்கை திமுக அரசு இழந்துவிட்டது. இதனால் லேப்டாப் வழங்குவதாக கூறியுள்ளது. ஏமாற்றி ஓட்டு வாங்க இதனை அறிவித்துள்ளனர் இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
உங்க ஆட்சியில என்ன கொடுத்தீங்க, அம்மா படம் போட்டு எதோ கொடுத்தீங்க, அது 5000 ரூபாய் தேறுமா?