மாவட்டத்தில் 20 இடங்களில் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு
கரூர்: கரூர் மாவட்டத்தில், 20 இடங்களில் நீர், நில பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடந்தது.
தமிழகத்தில் காப்பு காடுகள் மற்றும் வெளி-யிலும் ஏராளமான ஈரநிலங்கள் உள்ளன. இதில் தடுப்பணை, ஏரி, குளங்கள் அடங்கும். இவ்வகை நிலங்களில் பல்வேறு பறவை இனங்கள் தங்கி-யிருப்பதோடு, பருவ காலங்களில் இடம் பெயர்ந்து வருவதும் வழக்கமாக உள்ளது. அரிய மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள பறவை இனங்களை கண்டறியப்படும் போது, அவற்றை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்-கொள்வது அவசியமாகிறது.
இதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட-மாக ஈர நில பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்-பட்டு, இரண்டாம் கட்டமாக நிலப்பரப்புகளில் கணக்கெடுப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கரூர் மாவட்டம் முழுவதும், 20 இடங்-களில் நீர், நில பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. கரூர் வனச்சரகர் அறிவழகன் தலை-மையில், ஆசிரியர்கள் ஜெரால்டு, மனோகர் உள்-பட தன்னார்வ அமைப்பினர், வேளாண் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
காப்பு காடுகளுக்கு வெளியே உள்ள மாயனுார், வாங்கல், வீரராக்கியம், பஞ்சப்பட்டி, சின்ன-சேங்கல், வெள்ளியனை உள்ளிட்ட, 20 ஈர நில பகு-திகளில் பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்-ளப்பட்டது. இதில், காவிரி ஆற்று பகுதியான மாயனுார், கட்டளை நீர்ப்பிடிப்பு பகுதியில் நடந்த கணக்கெடுப்பின் போது, நீர் காகம், நாரை, கொக்கு, சாம்பல் குருவி, சிறிய பருந்து, வெண்க-ழுத்து மீன்கொத்தி உள்பட 30 வகையான பறவை இனங்களும், 300-க்கும் மேற்பட்ட பறவைகளும்
அடையாளம் காண முடிந்ததாக வன அலுவ-லர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்ளாத ராகுல்; உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்
-
ஜம்முவில் 30க்கும் மேற்பட்ட பாக் பயங்கரவாதிகள்; உளவுத்துறை எச்சரிக்கை
-
வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்கள் கொலை: அமெரிக்கா கண்டனம்
-
காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்
-
தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்; ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் மனு