ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கண்டனம்
கரூர்: தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மலைக்கொழுந்தன் வெளியிட்ட அறிக்கை:சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக, ஆயி-ரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் 'சம வேலைக்குச் சம ஊதியம்' என்ற கோரிக்கைக்காக போராடி வருகின்றனர். கடந்த சட்டசபை தேர்-தலின் போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
நான்கரை ஆண்டு முடிந்தும் வாக்குறுதி நிறை-வேற்றவில்லை. இந்த கோரிக்கைக்காக, ஒவ்-வொரு முறையும் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பதும், சமாதானப்படுத்தித் திருப்பி அனுப்-புவதுமாகவே இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக போராடி வரும் ஆசிரியர்கள் தாக்குதலுக்கு உள்-ளாக்கப்படுவதும், தரதரவென இழுத்து சென்று பஸ்களில் அலைக்கழிக்கப்படுகின்றனர். அராஜக போக்குடன் கைது செய்திருப்பது, அனைத்து தரப்பு ஆசிரியர்களையும் கவலை கொள்ள செய்கிறது. கடந்த காலத்தில், ஆட்சி மாற்றத்திற்கு காரண-மாக இருந்தவர்கள் அரசு ஊழியர்கள் என்பதை யாரும் மறுத்து விட முடியாது. தமிழக அரசு சார்பில் உரிய பேச்சுவார்த்தை மூலம் சரி செய்ய வேண்டும். போராடும் ஆசிரியர்கள் மீது ஏவப்-படும் அடக்குமுறைகளையும், வழக்குகளையும் கைவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்ளாத ராகுல்; உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்
-
ஜம்முவில் 30க்கும் மேற்பட்ட பாக் பயங்கரவாதிகள்; உளவுத்துறை எச்சரிக்கை
-
வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்கள் கொலை: அமெரிக்கா கண்டனம்
-
காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்
-
தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்; ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் மனு
Advertisement
Advertisement