மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை

நாமகிரிப்பேட்டை: மெட்டாலா கணவாய் ஆஞ்சநேயர் கோவிலில், மார்கழி மாத சனிக்கிழமையையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.


நாமகிரிப்பேட்டை யூனியன், கார்கூடல்பட்டி பஞ்., ஆத்துார் பிரதான சாலையில் மெட்டாலா அமைந்துள்ளது. இங்குள்ள கணவாய் ஆஞ்ச-நேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தீமிதி விழா, சனிக்கிழமை, அமாவாசை, பவுர்-ணமி மற்றும் அனுமன் ஜெயந்தி ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். முக்கியமாக புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம்.


இந்நிலையில், மார்கழி மாத சனிக்கிழமையான, நேற்று, இக்கோவிலில் சுவாமிக்குச் சிறப்பு வழி-பாடு நடந்தது. முன்னதாக, அதிகாலை வேளையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆரா-தனை நடந்தது.


தொடர்ந்து ஆஞ்சநேயர் சுவாமி வெற்றிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement