தமிழகத்தில் போலீசுக்கும் பாதுகாப்பில்லை: பா.ஜ.,

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூர் மாவட்டம், வீரராகவ பெருமாள் கோவிலில் போலீசாரை, மது போதையில் இருந்த நபர் கத்தியால் தாக்க முயற்சிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடித்த கதையாக, தற்போது மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசாருக்கும் பாதுகாப்பில்லாத அளவிற்கு சட்டம் - ஒழுங்கை சீரழித்துள்ளது, முதல்வர் ஸ்டாலினின் துருப்பிடித்த இரும்புக்கரம்.

போதையில் தள்ளாடவிட்டு, பேரழிவில் தமிழகத்தை நிறுத்திவிட்டு, போதையில்லா தமிழகம் என போலியாக மார்தட்டி கொள்ளும் தி.மு.க., அரசின் மமதைக்கு, மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement