ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் ரூ.192 கோடி டெபாசிட் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
புதுடில்லி: ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான வின்சோ நிறுவனத்தின் ரூ.192 கோடி மதிப்பு டெபாசிட் முடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இந்தநடவடிக்கையை அமலாக்கத்துறை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து வின்சோ நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் அந்த நிறுவனம் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் பயனர்களை மென்பொருளுடன் விளையாட வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், ஆன்லைன் விளையாட்டை மத்திய அரசு தடை செய்த பிறகு, பயனர்களுக்கு திருப்பித் தர வேண்டிய 43 கோடி ரூபாயை திருப்பித் தராமல் வங்கியில் வைத்து இருந்தது. இதனையடுத்து மோசடியில் கிடைத்ததாக கருதப்பட்ட 505 கோடி ரூபாயை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியிருந்தனர்.
இந்நிலையில் இந்த பண மோசடி வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், வின்சோ நிறுவனத்துடன் தொடர்புடைய ஆடிட்டர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணமோசடி தடுப்புச்சட்டத்தின்படி சட்டவிரோத பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வங்கிக் கணக்குகளிலும், பிக்சட் டெபாசிட் மற்றும் மியூச்சுவல் பண்டுகளில் இருந்த 192 கோடி ரூபாயை முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த பொழுதே இது போன்ற "ஆன்லைன்" விளையாட்டுக்கள், மீதொரு கண் வைத்திருந்திருக்க வேண்டும். ஓலா, ஊபர் மற்றும் இதர சேவைகளும் கறுப்புப் பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றும் முயற்சியே. அதோடு அமுலாக்கத்துறையின் விசாரணையை நீதிமன்றம் தடை செய்யாமல் இருக்கவும் முதற்குற்றப்பத்திரிக்கை இருந்தால் மட்டுமே விசாரணை என்றெல்லாம் கட்டுப்படுத்தாமல் விரைவாக விசாரித்து தண்டனை வழங்கியிருந்தால் அந்த அமுலாக்கத்துறை அதிகாரிகளுக்கும் ஒரு மன நிறைவு மதிப்பு இருந்திருக்கும் பல குற்ற நடவடிக்கைளில் விசாரணைகள் தடை செய்யப்பட்டு சிக்கியவர்களை தண்டிக்காமல் இருப்பதால் அதிகாரிகள் மனச் சோர்வடைந்து ஆக்கத்துடன் செயலாற்ற மாட்டார்கள் ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா என்று எண்ணி சாட்சியங்களை முறையாக அளிக்க மாட்டார்கள் வழக்கும் தோல்வியடையும் சில நேரங்களில், அறியாமையால் தவறு செய்தவர்கள் குற்றம் செய்தவர்கள் அல்ல தண்டிக்கப்பட வாய்ப்பு இருந்தாலும், குற்றவாளிகள் தப்பிக்க முடியாத சூழல் இருக்க வேண்டும் நடக்குமா? இறைவனே பாதி சொல்ல முடியும்
ED is mortally afraid of diravida goons, crooks and politicians.மேலும்
-
கலாசாரத்தை அழிக்கின்றனர்!
-
ஜப்பான் 6.0 ரிக்டர் அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பெரிய பாதிப்பு இல்லை
-
ரஷ்யா உக்ரைன் ட்ரோன் தாக்குதல் புத்தாண்டு கொண்டாடிய 24 பேர் பலி; 50 பேர் காயம்
-
யூரோவை கரன்சியாக ஏற்றது பல்கேரியா
-
சுவிட்சர்லாந்து விடுதி தீ விபத்தில் 40 பேர் பலி
-
அமெரிக்கா நியூயார்க் மேயராக இந்திய வம்சாவளி மம்தானி பதவியேற்றார்