பாதாள சாக்கடை குழியில் விழுந்து குழந்தை பலி: ரூ.20 லட்சம் இழப்பீடு
நாமக்கல்: பாதாள சாக்கடைக்கு தோண்டிய குழியில் விழுந்து, 4 வயது குழந்தை உயிரிழந்த நிலையில், மாநகராட்சி சார்பில், அவரது பெற்றோரிடம், 20 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்-பட்டது.
நாமக்கல் மாநகராட்சியில், புதிதாக இணைக்கப்பட்ட பகுதி-களில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்-டுள்ளது. அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட, 4-வது வார்டு சின்-னமுதலைப்பட்டி கடக்கால் வீதியில், பாதாள சாக்கடை பணிக்-காக, கடந்த, 31ல், 5 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது.
இதில் நீரூற்று ஏற்பட்டு தண்ணீர் தேங்கியது. நேற்று முன்-தினம் புத்தாண்டு என்பதால், தொழிலாளர்கள் பணிக்கு வர-வில்லை.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த கட்டட மேஸ்திரி மணி-கண்டன்-ரதிபிரியா தம்பதியரின் மகன் ரோகித், 4, நேற்று முன்-தினம் மாலை விளையாடி கொண்டிருந்தபோது, பாதாள சாக்-கடை குழியில் தவறி விழுந்து உயிரிழந்தார். நாமக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாநகராட்சி சார்பில், துணை மேயர் பூபதி, 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டு நிவாரண தொகையை, குழந்தையின் பெற்றோர்களிடம் வழங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் உடனிருந்தார்.
மேலும்
-
டிஜிட்டல் சைபர் குற்றவாளிகளிடம் ரூ.20 லட்சம் இழந்த பெண்; 14 நாட்களில் பணத்தை மீட்டது சைபர் கிரைம்!
-
வரும் சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை; நடிகர் சரத்குமார்
-
'லேப்டாப்'பில் கருணாநிதி, ஸ்டாலின் படம் நீக்கினால் 'வாரண்டி' கிடையாது
-
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர்; ஜனவரி 28ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை நடக்கும் என அறிவிப்பு
-
பருவநிலை மாற்றம் குறித்த நடவடிக்கை நமக்கான வாய்ப்பு: துணை ஜனாதிபதி
-
வெனிசுலாவில் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும்; உலக நாடுகளுக்கு போப் அழைப்பு